
என்னுடைய sms களில் வரும் காமெடிகளில் அதிகம் அடிபடுபவர் விஜயாக தான் இருக்கும்,சில சமயங்களில் அஜித்தும் அடி படுவார்,நான் இரண்டையுமே ரசிப்பேன்,நேற்று முன் தினம் விஜயின் வில்லு படத்தின் கதை என்று வந்த sms இல் இருந்து,இது....
உம்மனா மூஞ்சிகள் வெளியேரிடவும் .....
இனி வில்லு கதை,
கதைப்படி ,ஹீரோ விஜய் வெளிநாட்டில் வசிப்பவர்,அவருடைய காதலி நயன தாராவோ ,இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ,வசிப்பவர்,
பல நாட்கள் சென்று விட்ட நிலையில்,தன் காதலியை காண வேண்டும் என்பதற்காக,இந்தியா திரும்புகிறார் விஜய் ,நயனின் வீட்டுக்கு அவர் ஆவலாக சென்று உள்ளே காலடி எடுத்து வைக்க யத்தநிக்கிறார் , அங்கே நயன் ரத்த வெள்ளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்,இதை காண சகிக்காத விஜய்,அவரின் அருகே இருக்கும் ஒரு காகிதத்தை எடுக்கிறார்,அது நயனே தன் கைப்பட எழுதிய கடிதம்,
"என் சாவுக்கு காரணம் குருவி"
என்று ஒத்தை வரியில் இருக்கும் அதை படிக்கும் விஜய்,ஆக்ரோஷமாக விஸ்வரூபம் எடுத்து கண்ணில் படும் அனைத்து குருவிகளையும் கொன்று குவிக்கிறார்,இந்த தருணத்தில் படத்தில் CBI அதிகாரியாக ஜெயராம் திடீர் என்ட்ரி,
கேசை அவர் பக்காவாக நடத்த ,முதலில் நயனின் வீட்டை மீண்டும் சோதனை செய்கிறார், பல இடங்களில் சோதனை செய்யும் அவர் கடைசியாக டிவி அருகே செல்கிறார்,
அங்கே .....
"குருவி படத்தின் DVD யை கை பற்றுகிறார்,"
"The Case was Closed"
"விஜய் ROCKS"