Wednesday, October 29, 2008

சர்தார்க்கு ஒரு சலாம்...

நான் எழுதிய பல சர்தார் ஜோக்குகளை(பார்க்காதவர்கள் இங்கே சொடுக்கவும்,

1

2

3

4

5

6


)

பார்த்த என் டெல்லி நண்பன் சொன்னது இங்கே இடுகையாக...

ஏழு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நண்பன் மற்றும் அவன் நண்பர்கள் நம் தலைநகரத்தை சுற்றி பார்க்க ஒரு டாக்ஸி அமர்த்தி கொண்டு சுற்றி பார்த்துள்ளனர்...

அப்பொழுது அவர்களின் பேச்சு சர்தார்களை பற்றி திரும்பியது,அவர்களை வைத்து செய்யப்படும் காமெடிகளை சொல்லியவாறு அவர்கள் பயணித்துள்ளனர்...
அந்த டாக்ஸி இன் டிரைவர் ஒரு சர்தார் என்பது தெரிந்தே அவர்கள் சீண்டியுள்ளனர்,அவர் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாய் அவர் அமைதியாகவே வந்துள்ளார்...
பயணம் முடிந்து நண்பன் அவரிடம் எல்லா கணக்குகளையும் முடித்து விட்டு திரும்பும் போது அவனை கூப்பிட்ட சர்தார்,அவன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு சொன்னார்,
"நீ பார்க்கும் முதல் பிச்சைக்கார சர்தாரிடம் இந்த ஒரு ரூபாயை கொடு"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ,

"ஏழு வருடங்கள் கழித்து என் நண்பன் இன்று அந்த ஒரு ரூபாயை என்னிடம் காட்டினான்"

"சர்தாருக்கு ஒரு சலாம்"
என்ன இது உண்மை தானே?

No comments:

Blog Widget by LinkWithin