Wednesday, October 22, 2008

சில சோக்கு........

விவாத மன்றத்தில்,
சர்தாரிடம் ஒருவர்,

விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது?


சர்தார்:"கல்யாணம்"
---------------------------------
அமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை சிது ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,

இங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...

எல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,

"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை"


"India Rocks"......
---------------------------------------------------
நாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,

என்ன எருமையோட வாக்கிங்கா?

மற்றவர்:இது நாய்ங்க...

முதலாமவர்:
நான் நாய்கிட்டே கேட்டேன்....

----------------------------------------------------
தரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள?

தரகர்:
பார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....

பெண்ணின் அப்பா:
"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்"
-------------------------------------------------------
சர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,

என்னை பார்த்தா "foreigner"மாதிரி தெரியுதா?

மனைவி:இல்லையே...ஏன்?

சர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க "foreigner"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..
----------------------------------------------------------
சர்தாரிடம் வெளி நாட்டு நபர்,
"Any great man born in this state"
சர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....
----------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...

அதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்...
"யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க"....
----------------------------------------------------------
சர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....
முதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"

பிறகு இரண்டம் காலையும் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"


பிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...
தவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்"

பிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...

தவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....
ஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,

"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' "
-----------------------------------------------------------------------
ஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,
"ஏங்க அது சூரியனா நிலாவா?"
மற்றொரு சர்தார்:
"சாரிங்க நான் ஊருக்கு புதுசு"
----------------------------------------------------------

உங்களுக்கு மிகவும் பிடித்தது?
do post your comment...
->karthi

5 comments:

நையாண்டி நைனா said...

நகைச்சுவை துணுக்குகள் நன்றாகவே இருக்கிறது.
இதனுடனேயே... மற்ற விஷயங்களையும் எழுதலாமே.?

remove the word verification .

rapp said...

எல்லா ஜோக்ஸும் கலக்கல், மின்சார வாரிய ஜோக்தான் செம டைமிங்கான ஜோக்:):):) கலக்கல்:):):)

rapp said...

word verification எடுத்திடுங்க

Anonymous said...

nalla sokku....
EB romba nalla irundhadhu...
pl continue posting more jokes...

coolzkarthi said...

நன்றி நையாண்டி ,rapp மற்றும் அன்பு அவர்களே.....

நான் இப்பொழுது " word verification" ஐ எடுத்து விட்டேன்...

Blog Widget by LinkWithin