Wednesday, August 27, 2008

சாரி அது எங்களோட?

பூமியில் பற்பல நன்மைகளை(அவனா நீ ?)செய்த அந்த பெரியவர் இறந்த பின் ஸ்வர்க்கம் செல்கிறார்...
அங்கு வேலா வேலைக்கு tiffen சுட சுட காப்பி என அனைத்தும் கிடைக்க ஒரு நாள் அவர் காலார வாக்கிங் செல்கிறார் ...அப்பொழுது ஒரு வேலிக்கு மறுபக்கம் நரகம் என்று எழுதிய போர்டு தொங்குகிறது அதன் அருகில் பலர் ஒரே குஜாலாக இருக்கிறார்கள்...ராக் மியூசிக்,மது,கிதார் என சந்தோசமாக இருக்க இவர் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகிறார்... நேராக இன்சார்ஜ் இடம் சென்று நரகத்திற்கு மாற்றலாகி வருகிறார்...அவரை காணும் நரக இன்சார்ஜ், அவனை கட்டி எண்ணெய் கொப்பரையில் போடுங்கடா என்கிறார்..இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பெரியவர்..சற்று முன் நீங்கள் அனைவரும் படு குஜாலாக இருந்தீர்களே என்று கேட்கிறார் அதற்கு இன்சார்ஜ்..."சாரி அது எங்க விளம்பரம் சார்"..... இது எப்படி இருக்கு?
Blog Widget by LinkWithin