Saturday, March 21, 2020

கொரோனா அல்லது கோவிட்-19 எளிய தமிழில்

வாட்ஸாப்ப்(whatsapp)  மற்றும் முகநூலில் உள்ள பல தவறான தகவல்களை பார்த்து நொந்து போய் இதை எழுதுகிறேன்,
தயவுசெய்து, வெயிலில் கொரோனா பரவாது, எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது, அன்றே முன்னோர் சொன்னார், முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை, கோமியம் குடியுங்கள், ரசம் மற்றும் வேப்பிலை இரண்டே நாட்களில் கொரோனாவை குணப்படுத்துகிறது போன்ற செய்திகளை அனுப்பியவனை மனதுக்குள் ரெண்டு கெட்டவார்த்தை திட்டி மெசேஜ் ஐ அழித்துவிடுங்கள் முடிந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்கிவிடுங்கள் . தயவு செய்து அதை பிறருக்கு அனுப்பாதீர்கள்/பரப்பாதீர்கள்.

உண்மையில் இந்த இணையவெளியில் அனைவரும் வந்த பின் தான், பெரிய அறிவாளிகள் என்று எண்ணி கொண்டு இருந்தவர்களின் முட்டாள்தனங்கள் வெளியே தெரிகிறது. அவர்களை சொல்லி குற்றமில்லை, ஈமெயில் கணக்கு தொடங்கிய காலத்தில் ஒரு தடவை என் நண்பனுக்கு 100  கோடி ருபாய் பரிசு விழுந்துள்ளது வந்து வாங்கிக்கோங்க என்று இருந்த ஈமெயில் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கவுண்டமணி பாணியில் இந்த ரோடு என்ன விலை, சென்னையில் பாதி என்ன விலை இருக்கும் என்று லூசுத்தனமாக பேசிக்கொண்டு அதில் இருந்த தொடர்புக்கு போன் பண்ணிய போது ஒரு லட்சம் கேட்டதும் ஜகா வாங்கியது ஞாபகம் வருகிறது. இந்த இணையவெளியில்  பல சைக்கோக்கள் உலவுகின்றனர் அனைவருக்கும் அந்த ஐந்து நிமிட புகழ் என்பது ஒரு போதையாகிவிட்டது அதற்காக மாட்டு மூத்திரம் குடிக்கவும் தயங்குவதில்லை. முன்பு லெட்டர் போட்டு நீ இன்னும் பத்து பேருக்கு அனுப்பிவிட்டால் உனக்கு ஆய் வராது என்ற ரீதியில் மிரட்டுபவர்கள் இன்று இணையத்தில் அதை தொடர்கின்றனர் களம் மாறுகிறது அவ்வளவே.

  சரி கொரோனா பற்றி பாப்போம் இந்த சைக்கோக்களை திட்ட தனி புத்தகம் வேண்டும்.

அனைத்து அரசாங்ககங்களின் தற்போதைய டார்கெட் அதாவது குறிக்கோள் 'Flattening  the  curve ' தான். அதாவது எத்தனை பேர் ஒரு நாளைக்குள் நம் மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள் என்பதை ஒரு க்ராப்(graph ) போட்டோமேயானால் நம் மருத்துவமனையின் மொத்த படுக்கை வசதி மற்றும் எத்தனை பேர் மருத்துவமனைக்கு தீவிர நோய் அறிகுறியோடு வருகிறார்கள் என்பது தெரியும். கீழே உள்ளது போல,
Curve2


நம் மொத்த மருத்துவமனைகளின்  படுக்கை எண்ணிக்கை  ஆயிரம் ஆக இருக்கும்பொழுது ஒரு லட்சம் மக்கள் நோயின் அறிகுறிகளோடு வந்தால் நினைத்து பாருங்கள், அந்த curve ஒரு சுனாமியாக மாறி நம் மொத்த மருத்துவமனைகளையும் திக்குமுக்காட வைத்து விடும். இதில் அதி தீவிர கண்காணிப்பு தேவை படும் நபர்களின் நிலை தான் கவலைகொள்ள வைக்கும், கொரோனாவினால் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்தவர்கள், தானே சுவாசிக்க முடியாத நிலை வரும்பொழுது அவர்களுக்கு வெண்டிலேட்டர் சுவாச கருவி தேவைப்படும், அப்பொழுது ஏற்கனவே பலர் ICU - அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்பொழுது, டாக்டர்கள் யாருக்கு கொரோனாவை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்றுபார்த்து 60  70  வயது கடந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் கையறுநிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தாலியில் அதுபோன்று செய்துவிட்டு கண்முன்னே செத்துப்போகும் நபர்களை கண்டு அழுத செவிலியர்களின் நிலைதான் இங்கும் வரும். நினைக்கவே  மனம் பதைபதைக்கிறது. இதற்கு என்ன தான் வழி என்கிறீர்களா? கொஞ்சம் நேரம் முன்பு சொன்னோமே 'Flattening  the  curve ' அதுதான். அமெரிக்காவின் CDC சொல்லியபடி, 'It is not a matter of If, it is a matter of when'  அதாவது கொரோனா வருமா என்பதல்ல கேள்வி எப்பொழுது வரப்போகிறது என்பதுதான். அது வரும்போது அத்தனை பேருக்கும்  ஒரே நேரத்தில் வராதவாறு இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம். எனவே 1000 படுக்கைகள் மொத்த இருப்பு மருத்துவமனைகளில் என்று வைத்துக் கொண்டால், ஒரே நேரத்தில் 1000த்திற்கும் குறைவான பேர் அல்லது ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்க பட்டால் நம்மால் நிர்வகிக்க முடியும் அதுதான் 'flattening the curve' .  இங்கு தான் 'Social Distancing' வருகிறது, அதாவது சுய சமூக விலகல், அதிக மக்கள் கூடும் இடங்கள், நண்பர்கள் மற்றும் சொந்தங்களை சந்தித்தல், கேளிக்கை அரங்குகள், சினிமா அரங்குகள், பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம் போன்று மக்கள் நிறைந்த இடங்களை தவிர்க்க பாருங்கள். டிவி பாருங்கள், வீட்டில் குடும்பத்தினரோடு நேரம் செலவிடுங்கள், குடும்பத்தினரும் வெளியே சென்று வருதல் இல்லாமல் :) 

நீ இளவயது, எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளவனாக இருக்கலாம், அல்லது சூனாபானாவாக இருக்கலாம், சுருக்கமாக பெரிய புடுங்கியாக இருக்கலாம். உனக்கு வரும் வைரஸ் காய்ச்சல் ஓரிரண்டு நாட்களில்,வாரங்களில்  குணமாகிவிடலாம், ஆனால் நீ வெளியே போய்   தும்மும் ஒருமுறை உன்னை சுற்றி இருக்கும் 5 பேருக்கு பரவும்(5 பைசா திருடறது தப்பா) ஐந்து ஐநூறாகும்,ஐநூறு பிரளயத்தை கொண்டு வரும்...

உயிர் வரை பாதிக்கப்படுவது 50 வயது தாண்டியவர்களும், கர்ப்பிணிகளும், எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கான்செர், நீரிழிவு, எய்ட்ஸ், டிபி நோயாளிகள் தான். 

chaos Theory போல இங்கே நீ தும்முவது சூறாவளி ஆகக்கூடும். 

முப்பது அல்லது நாப்பது வயதுடையவர்கள் நம் ஊரில் அதிகம், அவர்களுக்கு  மருத்துவ உதவி தேவை, அது  கிடைப்பின் தேறிவிடுவார்கள், ஆனால் ஒரே நேரத்தில் அனைவரும் மருத்துவமனை போக நேர்தல்  கூடாது. 

வெயில் படும் இடத்திலுள்ள வைரஸ் நம் ஊரில் அதிகம் தாக்குபிடிக்காது என்பது உண்மை!!! பிற நாடுகளில் நோய்  பாதிப்புள்ள ஒருவர் தும்மி விட்டு போன இடத்தில் கை வைக்கும் ஒரு நபர் அவர் முகம் அருகே கொண்டு போகும் பொது பாதிக்கப்படுகிறார், அங்கே வெயில் கம்மி வைரஸ் அதிக நேரம் தும்மிய இடத்தில் இருக்கும். இங்கே அந்த மறைமுக வைரஸ் பரப்பல் எல்லாம் இல்லை, நம் ஊரில் முகத்துக்கு நேரே தும்மும் இருமும் பழக்கம் தான் அதிகம். நம்மை குற்றம் சொல்ல முடியாது. எனவே வெளியே செல்வதை அறவே குறைத்து விடுங்கள்.

மக்கள் செய்த/செய்யும் முட்டாள்தனங்கள்:


கொரோனா அல்லது கோவிட்-19 சில முக்கிய விஷயங்களை நினைவில் கொள்க,

1. நிலைமை சீரடையும் வரை வெளியே போகாதீர்கள் 
2. தவிர்க்க முடியாமல் வெளியே போய் வந்தால் ஒரு குளியல் போட்டு விடுங்கள். 
3. லோக்கலில் அடிக்கடி போக வேண்டிய நிலை வந்தால், முகம் அருகே  கையை கொண்டு போவதை தவிர்க்க பாருங்க, கஷ்டம் தான். வீடு வந்தவுடன் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கையை 20 நொடிகள் தொடர்ந்து சோப்பு போட்டு கழுவவும். இந்த 'Hand Sanitizer' விடவும் கையை சோப்பு போட்டு கழுவுவது சால சிறந்தது.
4. நாம் உள் நுழையும்போது வழக்கமாக தொடும் இடங்களை, கிருமி நாசினி கொண்டு அவ்வப்போது துடைத்து விடுங்கள். யாரேனும் வீடு வந்தாலும் இதை செய்யவும். அவர்களையும் கை கழுவ சொல்லி விட்டு பேசவும். வணக்கம் வைக்க டிரம்ப் ட்ருடோ போல் பழகிக்கொள்ளுங்கள், நம் முன்னோர்கள் அன்று வணக்கம் தான் வைத்தார்களாம்.
5. உங்கள் உடலினுள் கிருமி நுழைந்த நாளில் இருந்து உடலில் முதல் அறிகுறி தோன்ற குறைந்தது ஒரு நாள் முதல் 14 நாட்கள் வரை ஆகும். மிக அதிக பேருக்கு 5 நாட்களில் அறிகுறி வரும். அறிகுறி வரும் முன்னரே கிருமி பரப்ப தொடங்கி விடுவர். எனவே எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது கூட்டம் தவிர். 
6. உங்களின் எதிர்ப்பு சக்தியை கூட்ட என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ செய்யுங்கள், மனைவி திட்டும்போது எதிர்த்து பேசுவது எதிர்ப்பு சக்தியில் சேர்த்து இல்லை.
7. முடிந்தவரை சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யவும், youtube இல் 10 நிமிட உடற்பயிற்சி, வீட்டில் இருந்தே உடற்பயிற்சி என்று வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. அதிகம் நல்ல கமெண்ட்ஸ் இருக்கும் வீடியோ முறையை செய்யவும்.
8. சிகரட், தண்ணி அடிப்பது கொரோனா  வந்தால் பரமபதம் அடைய சுலபவழி . அறவே தவிர்த்து விடுங்கள். ஏற்கனவே அடி  வாங்கி இருக்கும் நுரையீரலும் கல்லீரலும் தாங்காது.
9.  இரத்த அழுத்தம், நீரிழிவு, சக்கரை இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்த 12 மணி டிவி புகழ் ஹீலர்கள் சொல் பேச்சு கேட்டு மாத்திரை மருந்து எடுக்காமல் இருக்காதீர்கள், இவை கட்டுக்குள் இருந்தால் உங்கள் மருத்துவ அட்மிட் நாட்கள் கணிசமாக குறையலாம், வாய்க்குள் கண்ட கண்ட tubeகள் டேஸ்ட் நன்றாக இருக்காது,நர்ஸ்களும் முகம் மூடி கொண்டுதான் வருவார்கள் யோசித்துக்கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூச்சடைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கிறது என்றால் Tamilnadu Coronavirus Helpline Number: 044-29510500; எண்ணுக்கு கால் செய்யவும். மெயில் 'ncov2019@gmail.com'. அதிகம் மக்கள் இருக்கும் மருத்துவமனைகளில் முன்னறிவிப்பு இன்றி செல்ல வேண்டாம். 
 11. காய்ச்சலுக்கு paracetamol (பாராசிட்டமால்) வகை மாத்திரைகளை உபயோகிக்கலாம் மறந்தும் கூட IbuProfen(இபுபுரோபென்)வேண்டாம், இபுபுரோபென்/ஐபுப்ரோபென் உடலின் வலி மற்றும் infalmmation வீக்கம் குறைக்க எதிர்ப்புசக்தியை மட்டுப்படுத்தும், எனவே வேண்டாம். டாக்டர் சொல் பேச்சு கேட்பது தான் சிறந்த வழி .
12. இருமும்போதும் தும்மும்போதும் உங்களின் முழங்கையால் மூடி இருமவும்/தும்மவும், இதுஉபத்திரவமில்லாதது, இது நம் ஊரில் அதிகம் பின்பற்றப்படுவதில்லை, இதன் மூலம் நீங்கள் பிறருக்கு தெரியாமல் கை கொடுக்க நேரிட்டாலும் அவருக்கு பரவாது, இது கொரோனா மட்டும் இன்றி இன்னும் பல குளிர் காய்ச்சலுக்கும் பொருந்தும். இது அனைவரும் பின் பற்ற வேண்டிய ஒன்று. நீங்கள் முழங்கையால் கதவு திறப்பது எல்லாம் செய்து விட்டு அதிலேயே தும்மினால் கம்பேனி பொறுப்பேற்காது :) 

Image result for sneezing in elbow

#கொரோனா வெல்வோம் 

Saturday, July 2, 2016

வந்துட்டேன்னு சொல்லு :)

யாராவது இருக்கீங்களா??? ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து 😢

Be Cool
Stay Cool

Sunday, December 1, 2013

ஹி ஹி ஹி ...

ஹி ஹி ஹி ...


Wednesday, March 23, 2011

கொஞ்சம் சோக்கு....

கல்லூரி வாழ்க்கையின் மூன்று முத்தான நகைச்சுவைகள்....

1.மச்சான் disturb பண்ணாதடா ,நான் படிக்கணும்.......

2.ச்சே,கிளாஸ் இல்லை,வாங்கடா லைப்ரரி போலாம்.....

last but not the least.....

3.சார்,ஒன் டவுட்.....
--------------------------------------------------


மெடிக்கல் காலேஜ் டீன்:எங்க பசங்களுக்கு தான் தைரியம் அதிகம்,அத எங்க வேணா prove பண்ண முடியும்....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி :ஹா ஹா ஹா,பாக்கலாம்....

மெடிக்கல் காலேஜ் டீன்:( ஒரு மெடிக்கல் மாணவனை கூப்பிட்டு)டேய்,இந்த கடல்ல சுறா மீன் நிறைய இருக்கு,இதுல குதிச்சு நீந்தி வா...

(மாணவன் குதித்து நீந்தி வந்தவுடன்)

மெடிக்கல் காலேஜ் டீன்:see their guts....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:(ஒரு ஆர்ட்ஸ் மாணவனை கூப்பிட்டு )டேய் இந்த கடல்ல குதிடா....

ஆர்ட்ஸ் மாணவன்:முடியாது போடா....

ஆர்ட்ஸ் காலேஜ் ப்ரின்சி:see their guts....
--------------------------------------------
சூப்பர் பஞ்ச்....

"உன்னிடம் இருப்பதை உலகுக்கு காட்டு,
உலகம் உன்னை நேசிக்கும்....."
இப்படிக்கு:நமீதா.....
--------------------------------------------

மாணவர்கள் காலேஜில் போர் அடித்தால் போகும் இடங்கள்...

முதல் பெஞ்ச் மாணவர்கள்:வாடா லைப்ரரி போகலாம்...

இரண்டாம் பெஞ்ச் மாணவர்கள்:உங்க வீட்டுக்கு போகலாம் வாடா....

மூன்றாம் பெஞ்ச் மாணவர்கள்:வாங்கடா படத்துக்கு போகலாம்...

கடைசி பெஞ்ச் சிங்க குட்டிகள்:மச்சான் போர் அடிக்குது வாடா க்ளாஸ்க்கு போகலாம்.....
-------------------------------------------------------

ஒரு குட்டி டயலாக்....
சொன்னவர் socrates.....

"ஆடம்பரம் என்பது,நாம் தேடி கொள்ளும் வறுமை"

எனக்குப் பிடித்த சில விளம்பரங்களின் காணொளிகள்...இங்கே



உங்களுக்கு மிகவும் பிடித்தது?


நன்றி நண்பர்களே......

Saturday, August 21, 2010

அமெரிக்கர்கள்.....(ஹைய்யோ ஹைய்யோ)

இந்த வீடியோ பாக்கறதுக்கு முன்னாடி சத்தியமா அமெரிக்கர்கள் அதிமேதாவிகள் அப்படின்னுதான் நெனச்சு இருந்தேன்.... இத பாருங்க நொந்து போய்டுவீங்க...
அதும் அந்த கேள்வி கேக்கறவன் வேணும்னே நோண்டி நோண்டி கேக்கறதும், மேப்ல ஆஸ்திரேலியாவ ஈராக்ன்னு காமிக்ரதுன்னு செம அக்கபோரு பண்ணி இருப்பானுக....





Be Cool...
Stay Cool...

Thursday, June 17, 2010

நாய்சென்ஸ் (ஹி ஹி ஹி)

ஹைய்யோ ஹைய்யோ....


Be Cool...

Stay Cool...

விமான விபத்துகளுக்கு காரணம்....

ஹி ஹி ஹி.....



நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...

Wednesday, June 9, 2010

என்ன கொடும சார் இது....


இடம் தியாகராய நகர்....
என்னத்த சொல்ல....
Be Cool...
Stay Cool...

Friday, June 4, 2010

என் வேலை எவ்வளவோ பரவா இல்லைடா சாமி....

இந்த ஆண்டின் சிறந்த தொழிலாளின்னு பட்டம் கூட கொடுக்கலாம் போல.....


நன்றி நண்பர்களே...
Be Cool...
Stay Cool...

Tuesday, May 11, 2010

Ranjitha's Latest Clips...

ரஞ்சிதாவின் சமிபத்திய கிளிப்கள் சில....
{}
{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}



பாவி பயலுக....என்னையும் இப்படி தான் நோவடிச்சாணுக....
நீங்களும் கொஞ்சம் அனுபவிக்கனுமே அப்படின்ற நல்ல எண்ணம் தான்....
நன்றி நண்பர்களே...
Be Cool...
Stay Cool...

எப்படியெல்லாம் யோசிக்கிறாக.....

அவசரமாக உச்சா அடிக்க உள்ளே போகும் போது.....


உள்ளே...,இப்படி இருந்தால் எப்படி இருக்கும்???????

அது கூட பரவாஇல்லை....22 மாடி கட்டிடத்தின் கடைசி மாடியின் குளியலறையில் இப்படி ஒரு ஓவியம்....அவசரமாக உள்ளே வருபவனின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்களேன்....



இது தான் ultimate....
சிகரட் பிடிக்கும் அறையின் ceiling painting.....இதற்கு பிறகும் அங்கே எவனாவது சிகரட் பிடிப்பான்????



நன்றி நண்பர்களே....
Be Cool...
Stay Cool...







Friday, April 9, 2010

நாய்களின் பொலம்பல்.....(நகைச்சுவை)



"இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா????"
"தயவு செஞ்சு மரத்த வெட்டாதிங்க...."
"உச்சா போக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கு"

->இப்படிக்கு உங்க "puppy அன் கோ......"

நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...

Monday, March 29, 2010

உங்களின் ரோல் மாடல் யார்????


சின்ன உளவியல் ரீதியான கணக்கு மூலம் உங்களின் ரோல் மாடல் யார் என்று கண்டு பிடிக்கலாம்.....


இதோ இந்த கணக்குக்கு என்ன விடை என்று சொல்லுங்கள்,(கால்குலேட்டர் எடுத்துக் கொள்ளலாம்)
1 to 9 க்குள் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளவும்
அதை மூன்றால் பெருக்கவும்
பின்பு மூன்றை அந்த விடையுடன் கூட்டவும்
பின்பு மீண்டும் மூன்றால் பெருக்கவும்,(பரவாஇல்லை நீங்கள் கூட்டும் வரை எனக்கு எந்த அவசரமும் இல்லை)
இப்பொழுது கிடைக்கும் இரண்டு அல்லது மூன்று இலக்க எண்ணில் உள்ள எண்களை கூட்டவும் (எ.கா 36=3+6=9)உங்கள் எண்ணை கீழே உள்ள லிஸ்டில் பொருத்தி பார்க்கவும்....
இப்பொழுது கிடைக்கும் எண்ணுக்கான தலைவர் தான் உங்கள் ரோல் மாடல்.....

1. Einstein
2. Nelson Mandela
3. Abraham Lincoln
4. Helen Keller
5. Bill Gates
6. Gandhi
7. George Clooney
8. Thomas எடிசன்
9. Coolzkarthi
10. Abraham Lincoln
அடடே நான் தானா அது....
பரவாஇல்லை,நான் உங்களை அந்த அளவுக்கு இம்ப்ரெஸ் பண்ணி இருக்கிறேன் என்று நினைக்கும் போது உண்மையில் புல்லரிக்குது நண்பரே....
(இன்று மொக்கை போதுமா)
ஹி ஹி ஹி....
Be Cool...
Stay Cool...

Monday, March 22, 2010

"LKG ரௌடீஸ்"



முதல் பையன்:தல!! தல !! உங்க ஆளு கிட்ட எவனோ ரப்பர் வாங்குறான்....

ரெண்டாவது பையன்:எந்த கிளாஸ் டா அவன்??

முதல் பையன்: LKG "B" தல...

ரெண்டாவது பையன்: உடனே B செக்சன்
" பல்பம் பாஸ்கர் "
"செரலாக் சேகர்"
"பென்சில் குணா"
"huggis பாபு "
கிட்ட சொல்லி,அவனோட slate, பீடிங் பாட்டில் எல்லாத்தையும் தூக்க சொல்ரா....

அவன் அழுவட்டும்...!!!

நல்லா அழுவட்டும்.... இந்த ஹோர்லிக்ஸ் கார்த்திகிட்ட வெச்சிகிட்டா இதுதான் நிலைமை அப்படின்னு புரியட்டும்....
----------------------------------------
குறும்புக்கார சிறுவர்கள்....





இது என் மெயிலில் வந்த ஒரு சின்ன கதை...



அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார்,

பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

பாதிரியார்:my son,Where is God?

அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்...
"Where is God"என்றார்..

இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார்,
"Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த,

சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் ,

"டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்"

என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்....

"இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"



Be Cool....

Stay Cool...

Sunday, March 21, 2010

சிறு கதைகள்.....

இங்கு இருக்கும் சிறுகதைகள் அனைத்தும் நான் சொந்தமாக எழுத முயற்சித்தவை,உங்களுக்கு பிடித்ததா என்று சொல்லுங்களேன்.....



இது நான் முயற்சித்த சயின்ஸ் fiction வகை கதை....

அவரை காப்பாத்தனும்...



இந்த கதை நான் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது...எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...
அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....

அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...அடுத்த நாள் செய்திகளில்,"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."



(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)


செய்திகளில் தொடர்ந்து வந்தது,"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் "
"நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... "

"நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"என்றுசெய்தி போய் கொண்டு இருந்தது...நன்றி,உங்களுக்கு பிடித்ததா?உங்கள் ->கார்த்தி cool.....நன்றி...

இன்னும் பல ...

ருத்ரன்...

எழுத்தாளனின் உணர்ச்சிகள்......



ஜீனியும் நானும்...


காக்காயன் மற்றும் காக்காணி....



சேலத்து உணவுகள்......


தேவதைகளின் தேவதை.....


சிறுகதை:எச்சரிக்கை இது ஒரு சுழல்...(ஆவிகள்)


சேலத்து உணவுகள் -2


வளர்ப்பு பிராணிகள் ....


நான் ரசித்த சிறு கதைகள்...



(கட்டுரை)பேச்சலரின் சொர்க்க பூமி(திருவல்லிக்கேணி)

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Tuesday, March 16, 2010

இதைப் பார்த்தாவது திருந்துங்க.....(காணொளி)



இதைக்காட்டிலும் நச் என்று யாராலும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்....

"QUIT SMOKING"

Be Cool...
Stay Cool...

Saturday, February 6, 2010

மொக்கைனாலும் மொக்கை சூர மொக்கை....(நகைச்சுவை)

மண்ணாங்கட்டி,இதுல லாஜிக்கல் கேள்விகள்ன்னு பேர் வேற.....

ஹைய்யோ முடியல.....
என்ன ஒரே போலம்பலா இருக்குன்னு பாக்கறிங்களா?
நீங்களும் புல்லா படிச்சிட்டு சொல்லுங்க நான் எப்படி நொந்து போய் இருக்கேன்னு தெரியும்..


LOGICAL QUESTION

Once there was a bus conductor, who was very rude to his passengers.

One day a beautiful young girl, of around 18 years,tried to board the bus, but he didn't stop the bus. Unfortunately the beautiful young girl came under the bus and died on the spot.

Angry passengers took the conductor to the police station, who in turn took him to the court.

The judge was not at all impressed with him and gave him capital punishment.

He was taken to the electrocution chamber.

There was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room.

The conductor was strapped to the chair and high voltage current was given to him! .

But to everyone's amazement, he survived.

The judge decided to set him free, and he returned to his profession.

After a few months, this time, a good looking middle aged woman tried to board the bus but the conductor didn't stop the bus.

Unfortunately, this time also, the good looking middle aged woman came under the bus and died on the spot. Again angry passengers took him to the police station, who in turn took him to the court.

The judge took one look at the conductor and gave him capital punishment.

The Bus conductor was taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room.

He was strapped to the chair and high voltage current was given to him.

This time also to everyone's amazement, he survived.

The judge decided to set him free, and he returned to his profession.

A couple of months later, an elderly gentleman tried to board the bus.

This time the Bus conductor, remembering his earlier experiences, stopped the bus.

Unfortunately the elderly gentleman slipped and died due to his injuries.

The conductor was taken to the police station and then to the court, to the same judge.

Though he hadn't done anything wrong, but considering his past record the judge decided to set an example and gave him capital punishment.

The Bus conductor was again taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room.

He was strapped to the chair and high voltage current was given to him.

This time he died instantly !!!!!!!!!!!


The question is why didn't he die on the first two occasions, but died instantly the third time??


Try to solve it yourselves. This is rather interesting and answer is perfectly logical.

If necessary read the puzzle once again.

Still you couldn't, Then see below...

Think hard

Tired????

wanna know the answer????


Answer :

During the first two times, the conductor was a Bad Conductor, therefore electricity didn't pass through him.

But during the third time, he was a good conductor, electricity passed through him freely and he died!!!!!!!! !!!!!!!!! !

Ha Ha Ha ha !!!!!!!! Obviously you gotta revise your science chapter on Electricity? ?





நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay cool...

Friday, February 5, 2010

மிக அதிகமாக பார்வையிடப்படும் தளம்...

கூகிள் தான் மிக அதிகமாக பார்வையிடப்படும் தளம் என்று நீங்கள் நினைத்தால் சாரி....

உண்மையில் மிக அதிகமாக பார்வையிடப்படும் தளம்,



கீழே....



{}


{}


{}
{}
{}
{}
{}
{}
{}
{}
{}



ஹி ஹி ஹி....நானும் இப்படிதான் நொந்து போனேன்.....

என்னா வில்லத்தனம்....

நன்றி நண்பர்களே....

Be Cool...

Stay Cool...

ஹைய்யோ ஹைய்யோ....(நகைச்சுவை)


நண்பர்களே,இந்த நகைச்சுவை என்னை மிகவே கவர்ந்தது நீங்களும் பாருங்களேன்....

ஹி ஹி ஹி...வழக்கம் போல் மெயிலில் வந்தது....

ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்....


A trainee in a big multinational company dialed CEO by mistake & said,

"Hey, send a hot coffee in accounts Dept in 2 min"

CEO shouted: Do you know with whom u are talking?

Trainee: NO

CEO: I am CEO of the Company.

Trainee in the same tone: Do you know with whom you are talking?

CEO: No

Trainee said: Thank God!!!!!!!!! !!!!!!!!! ! & disconnected the phone




--------------

நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Wednesday, February 3, 2010

ச்சே,வாய்ப்பே இல்லை...அற்புத க்ரியேட்டிவிட்டி...

இந்த படங்கள் என்னை மிகவே கவர்ந்தன...
ஒரே வார்த்தையில் சொல்வதானால்....
"வாவ்!"


நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள்....























நன்றி நண்பர்களே....

Be Cool...
Stay Cool...

Thursday, January 28, 2010

வாவ் என்ன க்ரியேட்டிவிட்டி!!!!...

நம்மிடம் ஒரு வெற்று காகிதத்தை கொடுத்து உனக்கு தோன்றியதை செய் என்றால்?

நான் என்றால் மிஞ்சி போனால் ஒரு கப்பலோ அல்லது அதிக பட்சம் கத்தி கப்பலோ செய்து இருப்பேன்,

ஆனால் இவர்கள்?


நண்பர்களே இது நான் கண்டு மிகவும் வியந்த படங்கள்....

"Creativity at it's peak" என்பேன்.....

ஒரு கலை கண்காட்சியில்,கலைஞர்களின் கையில் ஒரே ஒரு காகிதத்தை மட்டும் கொடுத்து உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள் என்று சொன்னபோது அவர்களின் கை வண்ணம் இவை....

நீங்கள் மிகவே எந்த படத்தை ரசித்திர்கள் என்றும் சொல்லவும்.....

























நன்றி நண்பர்களே...

Be Cool...
Stay Cool...
Blog Widget by LinkWithin