Monday, September 29, 2008

ஜீனியும் நானும்...

வீட்டில் நான் தனியே இருக்கும் நேரங்களை நான் மிகவே ரசிப்பது உண்டு,மனதில் பல எண்ணங்கள் நம்மை பற்றி நமக்கே அடையாளம் கண்டுகொள்ள உதவும்,சில சமயங்களில் டேய் பன்னாட நீ போக்கிரிடா என்றும் சில சமயங்களில் உத்தமபுத்திரனாகவும் பல சமயங்களில் வீழ்த்த முடியாத ஹீரோ ஆகவும் காட்டும்.
அன்றும் அப்படிதான் சிந்தனையினூடே, வீட்டில் இருந்து ஒரு அபயக்குரல்,சத்தியமாக கனவு இல்லை என்று மட்டும் தெரிகிறது,அந்த குரல் என் பேர் சொல்லி காப்பத்த சொல்ல,
வீட்டில் யாரும் இல்லை என்ற நிதர்சனமான உண்மை மட்டும் தெரிந்தது,ஆனால் குரல் வந்த திக்கில் நான் கவனித்த போது,கிட்டத்தட்ட சிலந்தி ஒன்று அந்த குழவியை நெருங்கி விட்டது தெரிந்தது,ச்சே இது என்ன இப்படியும் இருக்குமா என்று நான் திரும்ப நினைக்கும் போது,போகாதே என்னை இதனிடம் இருந்து காப்பாத்து நான் உண்மையிலே வரம் தரும் ஜீனி என்றது,
நான் எப்படி நம்புவது?(நான் அறிவாளி இல்ல),முட்டாளே நான் பேசுவதில் இருந்தே தெரியவில்லை நான் something special என்று?முட்டாளே என்றதில் என் தன்மானம் சற்றே உசுப்ப பட்டாலும்,அந்த கவர்ச்சிகரமான வரம் என்னை ஈர்த்தது,மீண்டும் நான் அதனிடம் நீ something special என்றால் நீயே உன்னை காப்பாத்திகொள்ளலாமே என்றேன்(மீண்டும் நான் அறிவாளி என்று prove பண்ண)அது மரண வாயில் இருந்து டேய் ***^# என்று திட்டி விட்டு எனக்கு நானே பண்ண முடியாது என்பது தான் விதி என்று மீண்டும் அபாய குரல் எழுப்பியது,இந்த முறை உண்மையிலே இரண்டும் மோத தயாராக இருக்க,நான் ஜீனியை காப்பாற்றுவது என்று முடிவெடுத்தேன்,ஒரு அட்டையை எடுத்து குறி பார்த்து அந்த சிலந்தியை ஒரே அடியில் சட்னி ஆக்கினேன்,அந்த குழவியை கைகளில் ஏந்தினேன் ,என் மானசீக ஜீனியே வரம் தா என்று சொல்லுமுன் ....அவர் ஒரு கொட்டு கொட்டி விட்டு பறந்து விட்டார்,சுரீர் என்று கையில் வலியுடன்,நடந்ததை நினைத்து கொண்டு இருந்தேன்,மூலையில் சுரீர் என்று ஏதோ உரைக்க encyclopaedia வில் சிலந்திகள் பற்றி பார்த்தேன்,அதில் சிலந்தியின் முக்கிய எதிரிகள் என்ற இடத்தில்....... red wasp (குழவி)

இது play boy பத்திரிக்கையில் இருந்து சுஜாதா எடுத்தது ,கதை வடிவம் என்னுடையது(க்கும்)...

Saturday, September 27, 2008

சக்கரகட்டி விமர்சனம்...(தயவு செய்து படத்தில் சம்பந்தம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்)

எனக்கு சற்றே இளகிய மனம் என்பதால் தான் சொன்னேன் படத்தில் தொடர்பு உள்ள நண்பர்கள் கண்டு மனம் நொந்து கொள்ள வேண்டாம்.

வேறு யாராவது இதற்க்கு விமர்சனம் எழுதியுள்ளார்களா என்று பார்த்த போது,
ஒருவர் ,
டாக்ஸி பாடல் ஹிட் ஆனதால் அதை reshoot செய்தார்களாம் அதே போல் படத்தையும் reshoot செய்திருக்கலாம். என்று சிம்பிள் ஆக முடித்து இருந்தார்...
நான் பார்த்த படங்களிலேயே சூர மொக்கையான படம் இதுவாக தான் இருக்கும்,
பேரரசு படங்களை கூட பார்த்து விடலாம் என்று பேரரசுவை நல்லவர் ஆக்கி விட்டார்கள்,படம் ஆரம்பித்த வுடன் american pie யை எடுக்க நினைக்கிறார்களோ என்று நினைதேன் ,ஆனால் அதையே எடுத்திருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும்.இவ்வளவு கேவலமான,நாடகம் போல் சை இன்று நாடகங்கள் கூட பல twist உடன் ,குறைந்த பட்சம் பெண்களையாவது பார்க்க வைக்கிறது,இயக்குனர் எதை எடுக்க நினைத்தார் என்பது கடைசி வரை தெரிய வில்லை.ரஹ்மான் தன் பாடல்களை வீண் ஆக்கியதற்கு நஷ்ட ஈடு கோர வேண்டும்...படத்தில் காமெடி பண்ணுகிறேன் என்று ஹீரோவின் நண்பர் பேசும் dialogues படு பயங்கர கடுப்பு...சத்யம் தியேட்டரில் போய் நன்றாக ac இல் தூங்கி விட்டு வரலாம்,நிச்சயம் பக்கத்தில் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்...
நல்ல அனுபவம் வாய்ந்த producer கூட எப்படி சறுக்கினார் என்பது தெறியவில்லை (மகன் என்னும் போது இன்னும் கதையை உன்னிப்பாக கேட்டு விட்டு ஒத்துக்கொண்டிருக்க வேண்டும்).
உங்களுக்கு நான் தரும் ஒரே அட்வைஸ்,தயவு செய்து போய் விடாதிர்கள்...பாட்டு இன்னும் கொஞ்ச நாளில் எல்லா மியூசிக் சேனல் களில் வந்து விடும்.ஓ மறந்து விட்டேன் படத்தில் வரும் பாடல்கள் மட்டுமே பார்க்கும்படி மற்றும் கேட்க முடியும் படி உள்ளது (இல்லை நன்றாகவே உள்ளது)...
இனி படம் நடக்கும் பொது கேட்ட comments,
1.இவனுக தமிழ் எப்போபேசுவானுக .
2.மச்சி தமிழ் பேசுராண்டா,
3.டேய் வெளில எங்க கைல சிக்குனிங்க ...
4. பத்து தடவ டாக்ஸி டாக்ஸி பாட்ட போட்டாலும் கூட பார்த்து இருக்கலாம்(அடியேன் சொன்னது).
இன்னும் பல..

மொத்தத்தில் சக்கரகட்டி
.
.
.

..
.
.
நாமகட்டி

Friday, September 26, 2008

Rangoli by girls and boys(simply funny)

இது என்னுடைய மெயில் இல் இருந்து சுட்டது...இது உண்மையில் சரியான கேலிகூத்து..
Rangoli by girls:


Rangoli by boys:


scroll
DOWN


















military fun contd.











Wednesday, September 24, 2008

ஷூட்(shoot)

இந்த கதை என் அப்பா எழுதி குமுதத்தில் வந்தது,
ராபர்ட் அங்கே வருவான் என்று டாக்டர் ஹென்றி கொஞ்சமும்
நினைக்கவில்லை,
ராபர்ட் பூமியில் மட்டும் அல்ல பல கிரகங்களில் அவன் மீது கொலை கொள்ளை வழக்குகள்,inter universe police கூட அவனை பிடிக்க முடியாத நிலையில் தான் அவன் டாக்டர் ஹென்றி முன்.
ராபர்ட்:டாக்டர் உங்களுக்கே தெரியும் jupiter இன்ஸ்பெக்டர் கார்ல் கிட்டத்தட்ட என்னை நெருங்கி விட்டான்,நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உயிரோடு இருப்பதா அல்லது எனக்கு உதவுவதா என்று முடிவு எடுக்க வேண்டியது தான்.

டாக்டர் உடன் பட்டார்,
இரண்டே நாட்களில் ராபர்ட் இன் clone ஒன்று மார்ஸ் கிரகம் நோக்கி செல்ல,அவன் எதிர் பார்த்த மாதிரியே இன்ஸ்பெக்டர் கார்ல் அவனை பின்தொடர்ந்து மார்ஸ் சென்றார்,
ஹாயாக ராபர்ட் அவன் வீட்டில் அடுத்த கொள்ளைக்கு நாள் குறிக்க,கதவை உடைத்து கொண்டு ஒரு பெரும் police படை அவனை சுற்றி வளைத்தது,முன்னால் சிரித்து கொண்டே கார்ல்..
ராபர்ட் உள்ளே ஏதோ ஒரு பிரேதேசத்தில் நோருங்கினான்,வயிற்றில் பய உணர்வு நீ நீ...மார்ஸ் என்று ஏதோ சொல்ல,
இன்ஸ்பெக்டர் கார்ல்,

அது என்னோட clone.....................................

Thursday, September 18, 2008

கொஞ்சம் சிரிங்க,

நன்றி:sms அனுப்பிய அனைத்து நண்பர்கள் மற்றும் cvag,

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பாபிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க. இரண்டவதுகுழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்-சிங்”குன்னு பேர் வச்சாங்க. ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரிகறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே””சம்- திங்-ராங்”குன்னு.
”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்” ஒரு காப்பி எவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? சரி, சரி அந்தகால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.

இன்பத்திலும் சிரி,துன்பத்திலும் சிரி,சிரிச்சுக்கிட்டே இரு
அப்பதான் நீ லூசுன்னுஎல்லாரும் நம்புவாங்க………

காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாதுஎலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாதுகள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாதுகோல’ மாவில்’ பூரி போட முடியாதுகோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது- இது மாதிரிஉன்னையும் குளிக்க வைக்க முடியாது!
-குளிக்கும்போது யோசிப்போர் சங்கம்

நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel insideMental outside !!!
- மல்லுக்கட்டி யோசிப்போர் ச?ங்க?ம்

நண்பா உன் எதிர்காலம்நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால…
சீக்கிரமா தூங்கப் போடா கண்ணு!

உன்னை யாரவதுலூசுன்னு சொன்னா???..
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள் !!!

என்னதான் கராத்தேலபிளாக்பெல்ட்டுனாலும்தெருநாய் தொரத்தினாஓடத்தான் செய்யணும்!

வாழை மரம்‘தார்’ போடும்ஆனால் அதை வச்சுநம்மால‘ரோடு’ போட முடியாதே!

நாய்க்கு நாலு கால் இருக்கலாம்,ஆனால், அதாலலோக்கல் கால்,எஸ்.டி. டி.கால்,ஐ.எஸ்.டி. கால்ஏன் ஒரு மிஸ்டு கால் கூடப் பண்ண முடியாது.
- விஞ்ஞானரீதியா யோசிப்போர் சங்கம்

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னாமாவாட்டச் சொல்வாங்கபஸ்ல காசுக் கொடுக்கலன்னாபஸ் ஓட்டச்சொல்வாங்களா?
- கஷ்டப்பட்டு யோசிப்போர் சங்கம்

டாக்டர் உங்களைச்சந்திக்கனும் நீங்க எப்ப “ஃப்பிரி”
எப்ப வந்தாலும் நான் “ஃப்பிரி” இல்ல “பீஸ்” வாங்குவேன்

அரண்மனைக்குள்ளே அடிக்கடி சரிங்சு விழுந்து காயம் பண்ணிக்கிறீங்களே மன்னா!
அதற்காக நீங்கள் கொற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிராய்ப்பு’னுபாட்டெழுதுற்தா?!

என்ன சார், நீங்க யூனிவர்சிட்டியில வேலை செய்யறதாசொன்னீங்க. ஆனா வீட்டுல சமையல்செய்துட்டிருக்கீங்க?நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்னு உங்களுக்கு தெரியாதா…?!

தண்டோரா போடுபவனை மன்னர் ஏன் தண்டிக்கிறாரு?
இளவரசியை அடக்குபவருக்கு காளை பரிசு’ன்னு மாற்றிச் சொல்லிட்டானாம்!!

பெப்ஸிக்கு சூர்யா… கோக்குக்கு விஜய்… ஃபேண்டாவுக்கு சிம்ரன்… கவலையேபடாதே மாமு’ கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை’

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க…

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன்தான்.

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னாபேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

வாளமீன்???
வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.கல்யாணமா கல்யாணம்.கல்யாணமா கல்யாணம்.மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ…?தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.

நான் ரசித்த கவிதைகள்.

1.ஆண்டின் இறுதியில் என்னை பார்த்து காலண்டர் கேட்டது,என்னை தவிர வேறு என்ன கிழித்தாய்.
2. பூ வைக்கிறாள் பொட்டும் வைக்கிறாள் விதவை,
தினமும் தன் கணவன் படத்திற்கு.
3.சிறு உரசலுக்கே தீக்குளிப்பா?
தீக்குச்சி
4.அம்மண சிறுவன் கீழே,
வெட்கமின்றி காற்றில் பறக்கும் கொடி.
5.வானை பார்த்து சிறுநீர் விட்ட சிறுவன்
நிலவை அசைத்தான் குளத்தில்.

குட்டி கதைகள்

இந்த முறை சற்றே சிறிய,குட்டி,தக்கனூண்டு கதைகள் பார்க்கலாமா?
இந்த கதைகள் எழுதுவதற்கு எனக்கு inspiration,கணேஷ் ,வசந்த் இன் பிரம்மா சுஜாதா.
கணேஷும் வசந்தும் இனி இல்லை என்று நினைக்க முடியவில்லை,நாம் பார்க்கும் பலரின் சாயல் அவர்களை போல் உள்ளதை நாம் காணலாம்,அதுதான் சுஜாதா,எத்தனை கற்பனை மற்றும் சயின்ஸ் fictions கொண்டிருந்தாலும் அவருடைய story characters நிஜம் போலவே,ஒரு சராசரி மனிதனின் பலம்,பலவீனத்துடன் காணப்படுவான்.
என்ன வசந்த் யாரையாவது கல்யாணம் செய்தானா?போன்ற கேள்விகள் முன் நிற்கிறது.மற்றும் அந்த(!)மெக்சிகோ சலவைக்காரி ஜோக்,ஹ்ம்ம் யாரை போய் கேட்பது?.

சரி இனி குட்டி கதைகள்,
1.கதையின் தலைப்பு:
சுவற்றில் ஆணி(ஆனி?) அடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தை.
கதை:பார்த்து concealed wiring தம்பி.
2.தலைப்பு:கரடி வேடமிட்டவனின் கடைசி வார்த்தை:
கதை:என்னை சுட்டுடாதிங்க
3.இந்த கதை நானே எழுதியது...(மெய்யாலுமே)
தலைப்பு:கடைசி மனிதன் டாக்டர்கள் புடைசூழ மரணபடுக்கையில்,
கதை:கைவிரித்தன ரோபோட்டுகள்.
4.தலைப்பு:காஸ் லீக் ஆகிறதா என்று பார்க்க சுவிட்ச் போட்டான்,
கதை:இருந்தது,வயது 24, கண்ணீர் அஞ்சலி மாலை ஐந்து மணிக்கு.

Tuesday, September 16, 2008

pets

வீட்டில் வளர்க்க சிறந்தது நாயா, பூனையா என்று சாலமன் பாப்பையா அவர்களை வைத்து ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம்,அது போல் மனிதனிடம் ஒன்றி போனவை நாயும் ,பூனையும்.ஆனால் எனக்கும் இவைகளுக்கும் என்றைக்குமே ஆனது கிடையாது.இவை மட்டும் அல்ல பல வளர்ப்பு பிராணிகளிடம் ,எனக்கு பயமா அல்லது அவைகளுக்கு என்னை கண்டு பயமா என்று தெரியாது ஏதாவது ஒரு விசயத்தில் அவைகளிடம் கடி வாங்கி விடுவது உண்டு.
எனக்கு அப்பொழுது சிறு வயது(இப்பொழுது என்ன கிழவனா என்று கேட்காதிர்கள்)இருக்கும்,வீட்டில் அவ்வபோது வந்து போய் பின்பு எங்கள் வீட்டு பூனையாக மாறிய எங்கள் புஸ்ஸி cat அன்று ஹாயாக படுத்து தூங்கி கொண்டு இருந்தது...நீங்களே சொல்லுங்களேன்,பூனை மேல் உட்கார்ந்து கொண்டு சின்ன பையன் நான்(அப்போ)சவாரி செய்ய நினைத்ததுஎன்ன பெரிய தப்பா?அது மரண பயத்தில் திரும்பி என் கால்களில் வவ் என்று ஒரு கடி கடித்து விட்டு ஓடிபோனது,அப்பொழுது இருந்து பூனைகளிடம் எனக்கு இருந்த உயர்ந்த மதிப்பு போய் விட்டது.அதே போல் நாய்.தெரிந்தவர்கள் ஒருவர் பெரிய அல்சேசன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள்,அவர்கள் வீட்டுக்கு போகும் போதெல்லாம் சரியாக என்னை பார்த்து ஒரு முறை முறைத்து குறைத்து விட்டு அதன் நேசத்தை காட்டும்,நானும் சளைக்காமல் போகும் போதெல்லாம் அதை தாஜா பண்ணுவதற்காக பிஸ்கட் ,பால்(ச்சே ச்சே லஞ்சம் இல்லை)எல்லாம் என் கையாலையே வைப்பேன்.
ஒரு நாள் என் அம்மா அன்றைக்குத்தான் ஏதோ ஸ்பெஷல் mushroom பிரியாணி செய்ய வேண்டுமா,செய்தது பத்தாது என்று தெரிந்தவர்கள் அனைவரிடமும் போய் அதை கொடுக்க வேண்டும் (எனக்கும் mushroom பிரியாணி செய்ய தெரியும்?) என்று என்னை அனுப்பினார்கள் .சரியாக அந்த வீடு வந்தது வீட்டின் முன்பு நம் அல்சேசன் இல்லாததால் நானும் தைரியமாக போய் கதவை தட்டி விட்டு நின்றேன்.அவ்வளவு நேரம் எங்கு தான் இருந்ததோ தெரியவில்லை பாய்ந்து வந்து என் அழகிய கணுக்காலில் ஒரு கடி,பிரியாணி வேண்டும் என்றால் என்னிடம் கேட்டு இருக்கலாமே நான் அலறி கீழே போட்ட பிரியாணியை சுவைத்து விட்டு கடித்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காமல் போய் விட்டது.இவ்வாறு நானும் நாயும் கௌரவமாக பிரிந்து விட்டோம்.என்னை ஒரு சிறு அணில் கூட விட்டது இல்லை தேடி வந்து கடித்து விட்டு போய் உள்ளது. ஒவ்வொரு முறையும் பல ஊசி குத்தியும் சளைக்காமல் ஏதாவது ஒன்றிடம் குறைந்த பட்சம் சிறு கீரலாவது வாங்கி வருவேன்.பொறுங்கள் நான் சொல்வதை வைத்து வளர்ப்பு பிராணிகளே கூடாது என்று முடிவுக்கு வந்து விடாதிர்கள்,இதையும் படியுங்கள்.
என்னை அவை எத்தனையோ பாடு படுத்தியிருக்கலாம்,ஆனால் இன்று நான் பலர் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாய் பார்ப்பது இல்லை மகளும் மகனும் எங்கோ தொலைவில் வேலை பார்த்து வசிக்க,இவர்களின் தனிமையை அவைகளை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு போக்க முடியாது.சிறு வயதில் நாம் நாயை என்ன பாடு படுத்துவோமா அதை போலவே அதை கொஞ்சி மகிழ்ந்து அவர்கள் தங்கள் மகனை மகளை கொஞ்ச முடியாத முறையில் கூட அவைகளை கொஞ்சுவதை பார்த்து உள்ளேன்.அவைகள் அவர்களிடம் ஒரு முறை கூட கோபபட்டு , கோபித்து நான் பார்த்தது இல்லை கேவலம் அவை வளர்ப்பு பிராணிகள் தானே,ஒன்றும் மனிதர்கள் இல்லையே அம்மா அப்பாவிடம் கூட கோபபட கோபிக்க.
என்ன வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாமா வேண்டாமா?

Friday, September 12, 2008

முடிந்த வரை சிரியுங்கள்...

எனக்கு தெரிந்து சிரிப்பை விட நல்ல வரவேற்பு இருக்க முடியாது..
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
நிஜமாகவே சிரிப்பு ஒரு மிக பெரிய தொற்று -------?தயவு செய்து முடித்து கொடுங்களேன்....

இது எப்படி இருக்கு?

இந்த கதையை நான் என் மாமாவின் blog இல் இருந்து சுட்டது ,
இளைஞன் ஒருவன் மிருகக்காட்சி சாலையில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கிருந்த கொரில்லா இறந்து விட்டதால் அவன் கொரில்லா போல் வேடமணிந்து கொண்டு குரங்கு சேட்டைகள் செய்ய வேண்டும்.இது தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை .அவனும் அதை ஏற்றுக்கொண்டு ஒழுங்காக செய்து வந்தான். ஒருநாள் அதிக கூட்டத்தைப் பார்த்த உற்சாக மிகுதியில் கண்டபடி குதித்தான்.அப்படி குதித்தபோது நிலை தடுமாறி பக்கத்திலிருந்த சிங்க கூண்டுக்குள் விழுந்துவிட்டான்.உடனே பயந்துபோய் "காப்பாத்துங்க ! காப்பாத்துங்க !!!" என்று கத்தினான். அந்த சிங்கம் மெதுவாக அவனிடம் வந்து சொன்னது, "முட்டாளே! கத்தாதே!!! நாம் நடிப்பது மக்களுக்கு தெரியக்கூடாது
Blog Widget by LinkWithin