Wednesday, October 29, 2008

சர்தார்க்கு ஒரு சலாம்...

நான் எழுதிய பல சர்தார் ஜோக்குகளை(பார்க்காதவர்கள் இங்கே சொடுக்கவும்,

1

2

3

4

5

6


)

பார்த்த என் டெல்லி நண்பன் சொன்னது இங்கே இடுகையாக...

ஏழு வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நண்பன் மற்றும் அவன் நண்பர்கள் நம் தலைநகரத்தை சுற்றி பார்க்க ஒரு டாக்ஸி அமர்த்தி கொண்டு சுற்றி பார்த்துள்ளனர்...

அப்பொழுது அவர்களின் பேச்சு சர்தார்களை பற்றி திரும்பியது,அவர்களை வைத்து செய்யப்படும் காமெடிகளை சொல்லியவாறு அவர்கள் பயணித்துள்ளனர்...
அந்த டாக்ஸி இன் டிரைவர் ஒரு சர்தார் என்பது தெரிந்தே அவர்கள் சீண்டியுள்ளனர்,அவர் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாய் அவர் அமைதியாகவே வந்துள்ளார்...
பயணம் முடிந்து நண்பன் அவரிடம் எல்லா கணக்குகளையும் முடித்து விட்டு திரும்பும் போது அவனை கூப்பிட்ட சர்தார்,அவன் கையில் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு சொன்னார்,
"நீ பார்க்கும் முதல் பிச்சைக்கார சர்தாரிடம் இந்த ஒரு ரூபாயை கொடு"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் ,

"ஏழு வருடங்கள் கழித்து என் நண்பன் இன்று அந்த ஒரு ரூபாயை என்னிடம் காட்டினான்"

"சர்தாருக்கு ஒரு சலாம்"
என்ன இது உண்மை தானே?

Saturday, October 25, 2008

அவரை காப்பாத்தனும்...

அந்த நபர் WHO என்னும் அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டதில் இருந்து ,அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றிய FLASH NEWS ஓடுவதில் இருந்து அந்த நபரின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்....
ஆஸ்பத்திரி முழுவதும் ஏதோ தீ பற்றி கொண்டது போல் ஒரு அவசர கதியில் இயங்கியது,டாக்டர்களின் குரலில் தெரிந்த அந்த பதட்டம் மற்றும் கவலை கண்கூடாக தெரிந்தது,
நாம் சாப்பிடுவதை எல்லாம் இவரும் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை ,இவர் தான் நம் முன் காலத்தின் மிக பெரிய பொக்கிஷம் என்றும் , வருத்தம் கலந்த தொனியில் டாக்டர்கள் பேசி கொண்டே நடந்தார்கள்....

ஏற்கனவே செயற்கை இருதயம்,நுரை ஈரல் என்று பொருத்தப்பட்டும் ."gene riot"என்னும் மரபணு புரட்சி அவன் மூளைக்கு பரவஅந்த டாக்டர்களே மனம் தளந்தார்கள்.....
அந்த maarble களால் சூழ்ந்த அறையில் ,phenyl வாசம் காட்டமாக அடித்தும் அது அந்த டாக்டர்களை ஏதும் செய்ததாக தெரியவில்லை,
அந்த நிசப்தமான அறையில் பல டாக்டர்கள் புடை சூழ,அவ்வளவு நேரம் பிடித்து வைத்த்ருந்த அந்த உயிர் என்னும் பறவைக்கு அந்த நபர் விடுதலை கொடுத்தார்...

அடுத்த நாள் செய்திகளில்,
"நம் உலகின் கடைசி மனிதனும் GENE RIOT என்னும் புது வியாதிர்க்கு பலியானான்,அவனை நமது ARTIFICIAL intelligence கொண்ட டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் காப்பற்ற முடியவில்லை..."
(இதோடும் முடிக்கலாம் ஆனால் கீழே உள்ளதை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமோ?)
செய்திகளில் தொடர்ந்து வந்தது,
"நம் நாட்டு வீரர்களுக்கும் பக்கத்து பாகிஸ்தான் வீரர்களுக்கும் நடந்த எல்லை சண்டையில் இரு பக்கமும் இருவர் இறந்தனர் சாரி செயலிழந்தனர் "

"நம் மெரினாவில் கொட்டி கிடக்கும் தங்கத்தை அல்ல ஆள் இல்லை ஆனால் நமக்கு சக்தி தரும் வைக்கோலின் விலை ஒரு கிலோ 10,000 தாண்டியது,போகும் போக்கை பார்த்தால் solar இல் இயங்கும் நம்மவர்கள் மட்டுமே இனி வாழ இல்லை இயங்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது... "

"நம் நாட்டுக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் நடந்த கிரிக்கெட் ஆட்டம் மழையால் தடை பட்டது"
என்று
செய்தி போய் கொண்டு இருந்தது...
நன்றி,உங்களுக்கு பிடித்ததா?
உங்கள் ->கார்த்தி cool.....
நன்றி...

Friday, October 24, 2008

பிடித்த சில வரிகள்...

இந்த முறை,எனக்கு பிடித்த சில வரிகளை இங்கே தந்துள்ளேன்...
வழக்கம் போல் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட்டிடவும்...

"Defeat the defeat before the defeat defeats you"
-------------------
"There is no psychiatrist,performing better than your(a) puppy licking your face"(how true)...
-------------------
"This world may be a hell/heaven to some other world..."
------------------
"I'm not afraid of one who knows 10,000 kicks,but I'm really afraid of that one who practices a kick 10,000 times"
->Bruce Lee
-------------------
"The real goal of education is to train the mind to think"
------------------
ஒரு முறை ஐன்ஸ்டீன் இடம் ஒருவர் கேட்டார்,
"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும்"
ஐன்ஸ்டீன்:"மூன்றாம் உலக போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது,ஆனால் நான்காம் உலக போர் நிச்சயம் குச்சியாலும்,கற்களாலும் தான் நடக்கும்"
என்றார்...
------------------
நினைவிருக்கட்டும் உங்களிடம் "ஹாய்" சொல்லும் ஒருத்தி மற்றவனிடம் "bye"

சொல்லி இருப்பாள் என்று...
------------------
"Speak softly and carry a big stick; you will go far."
------------------
“To err is human; to blame it on somebody else is even more human.”
------------------
“You are educated. Your certification is in your degree. You may think of it as the ticket to the good life. Let me ask you to think of an alternative. Think of it as your ticket to change the world."
------------------
"If you don't like the rules in your company,try hard,work sincerely and go places in the positions and acquire the top,then change the rule..."
------------------

சில ஜோக்ஸ் வழக்கம் போல்,


டீச்சர்:ஜானி சொல்லுங்கள்,நீங்கள் சாப்பிடும் முன் prayer பண்ணுவீர்களா?
ஜானி:"இல்லை,என்னோட அம்மா நன்றாகவே சமைப்பார்கள்"...
------------------
ஜானி,உன்கிட்ட ,நாய் பத்தி நான் எழுதிட்டு வர சொன்ன essay உன்னோட அண்ணன் எழுதினது மாதிரியே இருக்கே?....
ஜானி:"ரெண்டு பேரும் ஒரே நாய பத்தி தான் எழுதியிருக்கோம் டீச்சர் அதான்"
------------------
டீச்சர்:"அங்கே ஒரு அழகிய பெண் போகிறாள்",எங்கே ஜானி இதை ஆச்சர்ய வாக்கியமாக மாத்து...
ஜானி:"டேய் மச்சான் சூப்பர் பிகரு டா !"
------------------
நன்றி,-->கார்த்தி....cool

Thursday, October 23, 2008

காக்காயன் மற்றும் காக்காணி....

இது நான் நான்கு வருடங்கள் முன்பு எழுதிய கதை,
ஆர்வ கோளாறினால் குமுதத்திற்கு எழுதி போட்டு publish ஆகாததினால் ,விடா முயுற்சியுடன் ஆனந்த விகடனுக்கும் எழுதி போட்டு...ச்சே ச்சே publicity எல்லாம் எனக்கு பிடிக்காது ,அதனால் அதை publish பண்ணாதிர்கள் என்று கண்டிப்புடன்(?)
சொல்லிவிட்டேன்..
"இது காமெடி,romance மற்றும் tragedy "ஆகிய மூன்றும் கலந்து கட்டிய கலவை...
சரி இனி கதை....

காக்காயன் கருப்புதான்,அண்டங்காகம் தான் ஆனாலும் அவனோட கட்டுமஸ்தான உடம்போடு,ஒரு எவ்வு எவ்வி பறந்தால்,பக்கத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிக்கு செல்லும் காக்காநிகளின் பார்வை ஒரு முறை அவன் மேல் படிந்து விட்டு வெட்கத்துடன் திரும்பும்...

அன்றும் அப்படிதான்,காக்காயன் இரண்டே நிமிடத்தில் கீழே ஓடி கொண்டிருந்த எலியாரை ஸ்வாகா ஆக்கி தன் "பிரேக் பாஸ்ட்"முடிந்த திருப்தியில் அருகே இருந்த கரண்ட் கம்பத்தில்,ஒரு கம்பியின் மேல் போய் உட்கார்ந்து ஒரு நோட்டம் விட்டார்,சற்று தொலைவில் அவனையே பார்த்த வாறு காக்காணி...(நம் கதா நாயகி)...
காக்கானியின் மனதுக்குள் கற்பனை ஓடியது,"ஆள் அண்டங்காகம் தான் ஆனாலும் அம்சமாக இருக்கிறானே என்று"
அவள் வீட்டில் கலப்பு திருமணத்துக்கு ஒத்துக்கொள்வார்களா(இவள் சாதா காக்கை)என்று யோசித்தாள்...
சற்று நாட்களுக்கு முன் தன் தந்தை ஒரு கூட்டத்தில் பேசியது சாரி கரைந்தது அவள் ஞாபகத்திற்கு வந்தது...
"நாம் இன்று நம் பழைய வழிமுறைகளை கடை பிடிக்கிறோமா என்றால்,இல்லை என்றே சொல்ல வேண்டும்,இன்று யாராவது மனித பசங்கள் உணவு வைத்தால் நாம் பெயருக்கு மட்டுமே கரைந்து மற்றவர்களை கூப்பிடுவது போல் பாவ்லா செய்து விட்டு சாப்பாடை நாமே சாப்பிட்டு விடுகிறோம்,இது போல் மாறி வரும் பழக்கங்களுடன் நாம் இனி கலப்பு திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும்,இனி அண்டங்காகம் சாதா காகம் என்று பிரிவு இருக்க கூடாது "என்று அவர் பேசியது காக்கானியின் ஞாபகத்தில் வந்தாலும்,தன் மகள் என்றதும் தன் அப்பா என்ன சொல்வார்,என்று யோசித்தாள்..

அங்கே காக்காயன் மனதில்,"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ,"செல்லம்மா செல்லம்மா நில்லு நில்லு "என்று பல பாடல்கள் மனதிற்குள் கலந்து கட்டி ஆயிரம் வாட்ஸ் இல் அலறியது..
அங்கே அதற்கு சற்றே குறையாமல்,காகானியின் மனதில்"இவன் யாரோ இவன் யாரோ "என்ற பாடல் ஒளிபரப்பானது...

காக்காயனை நோக்கி ஜிவ்வென்று பறந்து வந்த காக்காணி எதிரே இருந்த கம்பியில் உட்கார்ந்தாள்...
மெதுவாக காக்காயனும் அவள் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு போனான்,அவர்களின் அலகு மெதுவாக slow motion இல் நெருங்கி..
நெருங்கி,ஒருவரின் அலகை மற்றவரின் அலகு தொட்டவுடன்,


"பளீர் என்ற வெளிச்சத்துடன்,படார் என்ற சத்தம் தொடர்ந்து வர,அங்கே இரண்டு உருவங்கள் புகைந்து கொண்டிருந்தது"

காரணம்,"+VE மற்றும் neutral கரண்ட் கம்பிகள்"
("இன்று இது ஆற்காட்டார் குறுக்கே வராமல் இருந்தால் மட்டுமே சாத்தியம்")

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ...அல்ல...அல்ல..."

------------------------
சரி இனி வழக்கமாக சோக்கு...(என் அப்பா எழுதி பத்திரிக்கையில் வந்தது)
"மனைவி:ஏங்க பக்கத்து வீட்டு நரசிம்மன் சார் உயிர் தூக்கத்திலேயே போயிருச்சாம்...
கணவன்:அட கடவுளே வா அவங்க வீட்டுக்கு போய் பார்க்கலாம்...
மனைவி:"கொஞ்சம் பொறுங்க பாடி இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையாம்"
-----------------------
titanic கப்பல் எப்படி முழுகியதுன்னு தெரியுமா?
தெரியாத சொல்றேன்...
"பொலக்,குபுக்,லுபுக் ,டுபுக்,புலுக்"அப்படின்னு...
ப்ளீஸ் சிரிக்காதிங்க,நானே சோகமா எழுதியது...
---
நன்றி...
உங்களுக்கு பிடித்ததா?
"do post your comment"
have fun,
-->கார்த்தி....cool

Wednesday, October 22, 2008

சில சோக்கு........

விவாத மன்றத்தில்,
சர்தாரிடம் ஒருவர்,

விவாகரத்திற்கு முக்கிய காரணமாக நீங்கள் நினைப்பது?


சர்தார்:"கல்யாணம்"
---------------------------------
அமெரிக்காவில் ஒரு புதிய,குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் கருவியை சிது ஒவ்வொரு நாடாக சோதித்து பார்க்க கொண்டு சென்றனர்,

இங்கிலாந்தில் பதினைந்தே நிமிடத்தில் நாற்பது குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஸ்காட்லாந்தில்,ஸ்காட்லாந்து போலீசாருக்கே சவால் விடும் வண்ணம்,பதினைந்தே நிமிடத்தில் எழுபத்தி ஐந்து குற்றவாளிகளை கண்டு பிடித்தது,

ஆஸ்திரேலியாவில் பதினைந்தே நிமிடத்தில் நூறு குற்றவாளிகளை கண்டு பிடித்தது...

எல்லாம் முடிந்து இந்தியாவில்,பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்தி வந்தது,

"அமெரிக்க மெஷின் ஐ காணவில்லை"


"India Rocks"......
---------------------------------------------------
நாயுடன் வாக்கிங் செல்பவரின் அருகில் வந்த ஒருவர்,

என்ன எருமையோட வாக்கிங்கா?

மற்றவர்:இது நாய்ங்க...

முதலாமவர்:
நான் நாய்கிட்டே கேட்டேன்....

----------------------------------------------------
தரகரிடம் பெண்ணின் தந்தை,நான் வேலையில இருக்க பையனா பார்க்க சொன்னேனே பார்த்தீங்கள?

தரகர்:
பார்த்தேங்க பையன் E.B ல என்ஜிநியர் ஆ இருக்கான்....

பெண்ணின் அப்பா:
"யோவ் நான் வேலைல இருக்கிற பையனா கேட்டேன்"
-------------------------------------------------------
சர்தார் வெளி நாட்டு பயணம் முடித்து விட்டு தன் மனைவியிடம்,

என்னை பார்த்தா "foreigner"மாதிரி தெரியுதா?

மனைவி:இல்லையே...ஏன்?

சர்தார்:லண்டன்ல ஒரு பொம்பள என்ன பார்த்து...நீங்க "foreigner"ஆ அப்படின்னு கேட்டா...அதான்..
----------------------------------------------------------
சர்தாரிடம் வெளி நாட்டு நபர்,
"Any great man born in this state"
சர்தார்:இல்லையே எல்லாம் குழந்தைங்க தான்....
----------------------------------------------------------
ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் சீன நண்பனை காண சென்ற சர்தாரிடம்,அந்த நபர் ஏதோ சர்தாரிடம் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்...

அதன் அர்த்தம் தேடி சீனா செல்லும் சர்தாரிடம்...மொழி பெயர்ப்பாளர் சொன்னார்...
"யோவ் நீ என்னோட ஆக்ஸிஜன் சிலிண்டர் tube மேல நின்னுட்டு இருக்க"....
----------------------------------------------------------
சர்தார் தவளையை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார்....
முதலில் தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு jump என்றார்,அந்த தவளையும் எப்படியோ தத்தி எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் ஒரு காலை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"

பிறகு இரண்டம் காலையும் வெட்டி விட்டு jump என்றார்,இம்முறையும் தவளை எகிறியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் இரண்டு கால்களை வெட்டினால்,அதனால் தாவ முடியும்"


பிறகு மூன்றாவது காலை வெட்டி விட்டு jump என்றார்...
தவளை எப்படியோ ஒரு காலில் கடைசியாக ஒரு துள்ளு துள்ளியது...

சர்தார் எழுதினார்,"தவளையின் மூன்று கால்களை வெட்டினாலும் ,அதனால் தாவ முடியும்"

பிறகு தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டு,jump என்றார்...

தவளை ஆடாமல்,அசையாமல் அங்கேயே இருக்க....
ஒரு துள்ளு துள்ளிய சர்தார் எழுதினார்,

"தவளையின் நான்கு கால்களையும் வெட்டினால்,'அதற்கு காது கேக்காது' "
-----------------------------------------------------------------------
ஒரு சர்தார் மற்றொரு சர்தாரிடம்,
"ஏங்க அது சூரியனா நிலாவா?"
மற்றொரு சர்தார்:
"சாரிங்க நான் ஊருக்கு புதுசு"
----------------------------------------------------------

உங்களுக்கு மிகவும் பிடித்தது?
do post your comment...
->karthi

Tuesday, October 21, 2008

SMS இல் வந்த முத்துக்கள்...

"Every person is a potential criminal,
Only fear stops him"
--------------------------------
வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்,
பரிச்சைக்கு முந்திய நாள் இரவின் பவர் கட்...
------
சூர மொக்கை படத்தை நண்பர்களுடன் ரசிப்பது...
--------
லைசென்ஸ் இல்லாமல் டிராபிக் போலீசிடம் மாட்டி கொண்டு கெஞ்சுவது...
-------
மதிய நேர பாத்ரூம் shower ஆட்டம்...
-------
நெருங்கியவரிடம் இருந்து வந்த missed கால்லுக்கு ,கால் பண்ண
முடியாத ,balance..
--------
பிறந்த குழந்தையின் கையை,இல்லை நம் கை விரலை அந்த அன்றில் பிறந்த குழந்தை பற்றும் அந்த உன்னத நேரம்...
--------
தனியே ஒரு தனிமையான பாதையில் பயணம்...
-------
முதல் சம்பளத்தை நம் பெற்றோர் முன் நாம் கொடுக்கும் போது அவர்கள் முகத்திலும் நம் முகத்திலும் வரும் பூரிப்பு....
-------------
என்றோ கழட்டி போட்ட பாண்டில்(pant) தேவையான போது பணம் இருக்கும் தருணம்
------
ஆஹா இனியன என்பேன்....
---------------------------------------
"Success is when your signature becomes an autograph"....

----------
இது அவசியம்,
"Love Your sister,Not their friends"
"love your friends,Not their sisters"
--------------
அமைதியான இரவு
அம்சமான நிலவு
ஆர்பரிக்கும் நட்சத்திரங்கள்
அசரவைக்கும் fan காற்றில்
அசந்து தூங்கும் என் நண்பனுக்கு,

குட் நைட்......
---------------------------------
உங்களுக்கு பிடித்தது?
do post your comment.....
meet u...Have Fun....
->karthi cool.........

SMS இல் வந்த சோக்கு...

மருத்துவ மாணவர்களை போல,இன்ஜினியரிங் மாணவர்களும் கால பணிக்காக கிராமப்புறங்கள் சென்றால்?அவர்களின் தொழில்.....
ஒரு ஜாலி கற்பனை.........

ECE மாணவர்கள் -ரேடியோ ரிப்பேர்,antenna வைத்தல்,குடை ரிப்பேர்....

CSE(IT) மாணவர்கள்:ஜோசியம் பாக்கலியோ,ஜோசியம்...கம்ப்யூட்டர் ஜோசியம் பாக்கலியோ?!

MECH மாணவர்கள்:சைக்கிள் ரிப்பேர்,டயர் puncture ஒட்டுறது,காத்து அடிக்கறது...

BIOTECH:உரம்,seeds...

EEE: EB ல கம்பம் நடறது,வீட்டுக்கு கரண்ட் connection கொடுக்கறது.....

செராமிக்:painter

சிவில் மாணவர்கள்:drainage,மேஸ்திரி வேலை...

Aeronautical:

இவர்களுக்கு சரியான வேலை,காக்கா,குருவி ஓட்டறது....
--------------------------------------
கணவன்:
காலெண்டர்ல என்ன பாக்கற?
மனைவி:
பல்லி விழுந்த பலன்....

கணவன்:எங்க விழுந்தது?
மனைவி:"நீங்க சாப்பிடுற சாம்பார்ல"....
----------------------------------------
நண்பா ,
"எனக்கு குழந்தையின் சிரிப்போ"
அல்லது
"மனைவியின் முத்தமோ"
அல்லது
"மென் மழையோ"
எதுவுமே நீ சொன்ன அந்த மூன்று வார்த்தைகளில் இருந்த அந்த துல்லிய சந்தோசத்தை
தர வில்லை..."மச்சான் சரக்கு ரெடி "....
------------------------------------------------
மீண்டும் நம் சர்தார்,
ஒரு முறை சர்தார் டிராபிக் ஜாமில் மாட்டி கொள்ள நேர்ந்தது,
அருகில் இருந்தவரிடம் சர்தார்,
"ஏன் இவ்வளவு டிராபிக்?"
மற்றவர்:கவர்னர் போகிறாராம்...
சர்தார்:"கவர்னர் என்ன பெரிய கலெக்டரா ?"
---------------------------------------------------
நண்பா நான் நம் தேச தந்தை காந்திஜியின் பல படங்களை சேமிக்கிறேன் நீயும் உன்னிடம் இருக்கும் ரூபாய்களை கொடு(ஆயிரம் ரூபாய் நோட்டில் தான் அழகாக சிரிக்கிறார்)
----------------------------------------------------
நீ தூங்கும் பொது நினைத்து பார்த்தது உண்டா,
ஒருவேளை பேன் உன் மேல் விழுந்தால்?
ஒரு பல்லியோ பாம்போ உன் மூக்கின் உள் புகுந்து வாயில் வெளியே வந்தால்?
நீ ஜன்னலை சாத்தும் போது ஒரு கை உன்னை பிடித்தால்?
உன் வீட்டு மொட்டை மாடியில் கொலுசு சத்தம் கேட்டால்?
எது எப்படியோ,நீ நன்றாக தூங்கு....
"ஸ்வீட் dreams...."

Saturday, October 18, 2008

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது

இது என் மெயிலில் வந்தது,இது எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்கள் கணிப்பில் விட்டு விடுகிறேன்....


அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

………………………………………………

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.

கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.

தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.

எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். "ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக" ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.

"பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு" என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் 'மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்' என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.

திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் 'மக்கள் பிரதிநிதிகள்' ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.

அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். "தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா.." என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். "குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!" என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது 'முதலாளித்துவம் ஒழிக!'

•••

இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். "கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…" (நாணயம் விகடன், அக்15)

எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.

அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை 'நெருக்கடி' என்று கூறுகின்றது முதலாளித்துவம்.

வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி' தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்

இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.

"வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்" என்று முடிவு செய்தார்கள்.

ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.

நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். 'ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். தயங்கியவர்களிடம், '10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்' என்று ஆசை காட்டினார்கள். 'வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்' என்று வலையில் வீழ்த்தினார்கள். 'அதுவும் கஷ்டம்' என்று மறுத்தால், 'பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்' என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.

இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் 'கடன் வேண்டுமா?' என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல 'வீடு வேண்டுமா?' என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.

ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. 'விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்' என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. 'ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ' என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.

விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் 'வீடு வேண்டாம்' என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.

•••

இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?

ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.

எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure) , வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். "இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு" என்று கோருகின்றார்கள் மக்கள்.

திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.

ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.

பொதுவாக, கடன் என்பது 'கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்' மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.

இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு 'மிக நம்பகமான கடன்கள்' என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.

பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! 'இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக'ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், 'ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய' டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!

பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!

•••

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை 'டர்ர்ர்' என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.

35 இலட்சம் கோடி 'மொய்'ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த 'சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்'துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ 'அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை' என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?

அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 'சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!' என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?

முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். 'கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது' என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?

"தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்" என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், "அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்" என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.

யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?

•••

தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், 'போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்' ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?

பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். "ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்" என்று போதையூட்டினார்கள். "எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?" என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.

உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் 'மதிப்பை' ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் 'பொருளாதார வளர்ச்சி'. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!

"இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். 'உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே' மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். "வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்" என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.

•••

புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த 'அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி'யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!

அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், 'பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்' என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.

'புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

'அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்' என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. 'உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்' என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். 'மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே' என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!

அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, 'அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்' என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. 'எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக' உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.

இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!

நான் ரசித்த சிறு கதைகள்...

இந்த கதைகள் நான் எங்கேயோ படித்தவை...உங்களுக்காக இங்கே...

கிண்டி ரேஸ் கோர்ஸ்.....
எந்த குதிரை மீது பணம் கட்டலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான் கணேஷ்....

அவன் மெதுவாக தன் பிறந்த தேதியை யோசித்தான்,25...கூட்டி பார்த்தான் 7,
அவன் தான் குடும்பத்தில் ஏழாவது பையன்,
அவன் அப்பாவும் குடும்பத்தில் ஏழாவது பையன்,
அவனுடைய கம்பெனியில் அவனுக்கு கீழே ஏழு பேர் வேலை செய்கிறார்கள்...
அப்பொழுது மணியும் ஏழு...
இப்படி அவனுக்கும் ஏழுக்கும் பொது முதல் அந்தரங்கமாக பல விசயங்களில் ஒத்துபோவதால்,
அங்கிருந்த ஏழாம் எண் குதிரையின் மேல் சுமார் ஒரு லச்சம் கட்டினான்...
போட்டி தொடங்கியது....


அவன் குதிரை,அதான் அந்த ஏழாம் எண் குதிரை,
சரியாக

கரெக்ட் ஆக

ஏழாவதாக வந்தது....
----------------------------------------------------------------------

அந்த அமெரிக்க சிறு படையில் இருந்த அனைத்து ஆண்களுக்கும் ஒரே ஒரு ஆசை இருந்தது....
அது என்னவென்றால்,அந்த பகுதியிலேயே அழகாக இருந்த ஒரு விலை மகளிடம் ஒரு இரவை கழிக்க வேண்டும் என்பதுதான்...
ஆனால் அவளிடம் பிரபுக்களும்,மந்திரிகளும் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலைமை...அவ்வளவு பணம் கேட்பாள்...

இதனால் அங்குள்ளவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள்,அதன்படி அனைவரும் இரண்டு டாலர் தருவது என்பதும்,அனைவரின் பேரும் எழுதி குலுக்கல் முறையில் யார் பெயர் வருகிறதோ அவர் போகலாம் என்று முடிவானது..
அதன்படி ஒரு இளைஞன் தேர்ந்தெடுக்க பட்டான்,

அந்த பெண்ணிடம் அவன்...
அவனை கண்டதும் அவன் சாதாரண ஒருவன் என்பதை அறிந்து கொண்ட அவள் அவனிடம் விவரம் கேட்டு அறிந்து கொண்டாள்..
அவளுக்கு வெளியே இருக்கும் grace புளகாங்கிதம் அடைய வைத்தது...
அவள் அவனிடம்,"நீ சொன்ன செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,அதனால் உனக்கு மட்டும் நான் இலவசமாக,எனக்கு உன் பணம் வேண்டாம்" என்றாள்....
அந்த இளைஞனுக்கு மேலும் மகிழ்ச்சி ஆனது... அவ்வளவு பணமும் நமக்கு தான் என்று எண்ணி கொண்டிருந்த போது...
அவள் அவனிடம்,
அவனுடைய இரண்டு டாலரை மட்டும் தந்தாள்....(unexpected?)
----------------------------------------------------------------------------
இது நானே எழுதியது...
(C) coolzkarthi(பி.கு)
ரமேஷ் அந்த பெண்ணை பார்த்த உடன்,அவன் மட்டுமின்றி அவனுடைய காரும் இயங்க மறுத்தது...
அவள்,அவன் எங்கேயோ பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் பார்த்தவளின் அழகிய கண்களுடனும்,பக்கத்து வீட்டு ரேகாவின் அழகிய கூந்தலுடனும்...சத்யம் தியேட்டரில் தன் boy friend உடன் வந்தவளின் நளினம் என்று ஒரு கலந்து கட்டிய தாஜ் மகால் போல் இருந்தாள்,அவளிடம் சென்ற ரமேஷ்...நீங்க 'சுந்தரி' தானே என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசினான்,
டக் என்று திரும்பினால் கழுத்து உடைந்து விடுமோ என்னமோ என்று அவள் மெதுவாக ஒரு தேர்ந்த நளினத்தோடு திரும்பி...
"நான் சுந்தரி இல்லைங்க சுந்தர் இப்பதான் பாம்பே ஆபரேஷேன் ... என்று முடிப்பதுக்குள்,ரமேஷின் கார் speedometer இல்
ஐம்பதை தாண்டி தலைதெறிக்க ஓடி கொண்டிருந்தது....(கூடவே ரமேஷ் உம் தான்)...(unexpexted too?)
-----------------------------------------------------------------------------------
உங்களுக்கு பிடித்த கதை?post comment ...
நன்றி.....

Thursday, October 16, 2008

சினி விமர்சனம் ("மெயின் ஹூ நா-" ஏகன்?)

இது "மெயின் ஹூன் நா"(நான் இருக்கிறேன்) என்கின்ற ஹிந்தி படத்தின் விமர்சனம்....கொஞ்சம் இருங்க ஹிந்தி படத்தின் விமர்சனம் நமக்கு எதுக்கு என்று போக வேண்டாம்,ஏனென்றால் இது தான் ஏகனின் மூல கதை........
ஒரு வரியில். கதையை. சொல்வது. என்றால்....பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அமைதி ஏற்படுவதை விரும்பாதவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் அவர்களை எப்படி நம் ஹீரோ தடுத்துஅமைதியை ஏற்படுதிகிறார் என்பதை. எக்கச்சக்க மசாலா,கார கொழம்பு என்று, கமர்ஷியல் குருமா, ஆக்கியிருக்கிறார்கள்...ஆனாலும் கொஞ்சம் ரசிக்கும் படியாகவே உள்ளது....
Cast:
1.Sharukh
2.Sushmitha Sen
தமிழில் : sharukkhin கேரக்டரில் அஜித்,
Sushmitha Sen கேரக்டரில் நயன்தாரா ,
sharukkin தம்பியாக பண்ணியவரின் கேரக்டரில் "அறிந்தும் அறியாமலும் "புகழ் நவ்தீப். இதில் என்ன பிரச்சினை என்றால் ஹிந்தி படத்தில் sharukkhin தம்பியாக நடித்தவர் செம freaky மற்றும், நல்ல மாடர்ன் லுக்காக இருப்பார்.... சிம்ப்ளி dream boy and play boy ஆக இருப்பார். ஆனால் நவ்தீப்பை அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை ... சரி கதை இதுதான்.....

சிறு வயதிலேயே தன் தாயை இழந்த ராம் தன் தந்தையை தேடி போகிறார் அங்கே அவருக்கு ஒரு சித்தி இருப்பதை இவர் அறிந்து கொள்வது போல,அந்த சித்தி தன் கணவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறார் (இருந்திருக்கிறார்)என்பதை அறிந்து கொண்டு தன் மகன் "லக்ஸ்மன்"உடன் கிளம்பி விடுகிறார்...ராமின் தந்தை ஒரு உயர் ராணுவ வீரர்...

ராம் தன் தந்தையுடன் இருந்து ராணுவத்தில் மேஜர் ஆகிறார்...
இதனிடையே ராணுவ கருத்தரங்கில் கலந்து கொள்ளும் chief கமாண்டர் இன் உயிரை காப்பாற்ற,ராமின் தந்தை பலியாகிறார்...
இதனால் மனம் விரக்தி அடையும் ஷாருக் ஐ கமாண்டர் கூப்பிட்டு,அவருக்கு ஒரு change ஆக இருக்கட்டும் என்று,தன் மகள் படிக்கும் காலேஜ்(டார்ஜீலிங்) அனுப்பி அவளை கண்காணிக்கும் பொறுப்பை முன் வைக்கிறார்,முதலில் மறுக்கும் ஷாருக் பின்பு அங்கே தான் தன் தம்பியும் படிக்கிறார் என்று அறிந்து கிளம்புகிறார் மாணவனாக, வாத்தியாராக அல்ல(என்ன கொடுமை சார் இது).அங்கே உள்ளவர்கள் அனைவரும் அங்கிள் அங்கிள் என்றே இவரை கூப்பிடுகிறார்கள் ...ஒரு கட்டத்தில் அங்கே இருக்கும் ஒரு freaky மாணவனை ஷாருக் காப்பாத்தி விட அனைவரும் நல்ல நண்பர்களாகிறார்கள் ,பின்புதான்அந்த freaky நண்பன் தன் தம்பி தான் என்பதை ஷாருக் அறிகிறார்,

தன் தாயுடன் (சித்தி)சமரசமாக போனாரா? தம்பி அவரை ஏற்று கொண்டானா? என்பது எல்லாம் பாச போராட்டமாக சொல்லி உள்ளனர்...


பின்பு அங்கயே வில்லன் குரூப் வந்து,முழு காலேஜ் ஐயும் சிறை வைத்து விட ஷாருக் மேற்கொள்ளும் தந்திரங்கள் தான் கதை....
கடைசியில் எப்படி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான பேச்சு வார்த்தை மற்றும் மக்கள் சந்திப்பு போன்றவற்றை தடுக்கும் முன்னாள் இந்திய ராணுவத்தை சேர்ந்த சில பாகிஸ்தான் எதிர்ப்பு வீரர்கள் கம் வில்லன்களை ஷாருக் எப்படி முறியடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

அட கடவுளே சொல்ல மறந்து விட்டேன், இதில் நயன் சாரி சுஷ்மிதாவின் பங்கு...chemistry மேடம் ...
அவர் வரும் போது எல்லாம் ஷாருக் இரண்டு கைகளும் கட்டி அணைக்கும் போசுக்கு தானே செல்ல அதை அவர் அடக்க படும் பாடும்,அவருக்கு பின்னால் பலர் வந்து இசை கச்சேரி நடத்துவதும் சரியான அலும்பு...இதில் குறிப்பிட வேண்டிய மற்றவர்கள்...
"மழை professor "(பேசும் பொது முன்னாள் இருப்பவர் தொப்பலாக நனைந்து விடுவதால்)மற்றும் பிரின்சிபால் அவர் ஒருவருக்கு தான் ராம் ஸ்டுடென்ட் இல்லை என்றும் அவர் ஒரு மேஜர் என்பதும் தெரியும்...இதனால் அவர் பல இடங்களில் salute அடித்து மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று தன்னை மறைக்கும் இடங்கள் நல்ல காமெடி...

படத்தை பற்றி ஒருவரிடம் இந்த படத்தில் இருந்து என்ன தெரிகிறது என்று கேட்டேன்(இந்தியாவிலும் பாகிஸ்தானுடன் சமாதானத்தை விரும்பாதவர்கள்(தீவிரவாதிகள்) இருக்கிறார்கள் என்று சொல்வார் என்று எதிர்பார்த்து)

அவர் சொன்னார்,
"எப்போ ஒருத்தன் அவனுடைய பையனுக்கு லக்ஸ்மன் என்று பெயர் வைக்கிறானோ அவனுக்கு ஏற்கெனவே ஒரு பையன்
இருக்கிறான்(ஒரு முன்னாள் wife கூட ) என்று அறிந்து கொள்ளலாம் என்றார்"

படம் நல்ல கமர்ஷியல் ஹிட்....
ஏகனை எதிர்நோக்கி....எதிர்பார்ப்புகளை
பூர்த்தி செய்வார்களா?ராஜு சுந்தரம் மற்றும் அஜித்...
இந்த தீபாவளி

வெறும் புஸ்வானமா அல்லது,
"தல தீபாவளி"யா?
பொறுங்கள் இன்னும் இரண்டு வாரங்கள்...

Wednesday, October 15, 2008

காமிக்ஸ் காமிக்ஸ்...

"நான் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இன் தீவிர ரசிகன் என்பதை பறை சாற்றுவதில் பெருமை கொள்கிறேன்"

என் சிறு வயதில்(இப்பொழுது ஒன்றும் கிழவன் இல்லை)நான் பிற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் என்பதால் தான்...
அதன் படங்களை பார்க்கும் பொது உண்டான ஈர்ப்பு...என்னை கேட்டு கேட்டு படிக்க தூண்டியது...
முதலில் ராணி காமிக்ஸ் இல் இருந்து பிறகு லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இற்கு தாவினேன்...
நான் படிக்க ஆரம்பித்தது என்னவோ 90 களில் தான்.ஆனாலும் என்னால் இன்னும் அதனிடம் இருந்து விடு பட முடிவதில்லை...

காமிக்ஸ் இல் இருக்கும் பல விஷயங்கள் மறக்க முடியாதவை...சில ஐடியாக்கள் சிலிர்க்க வைப்பவை...குறிப்பாக,

காலடி தடத்தை வைத்து எத்தனை செவ்விந்தியர்கள்,எத்தனை வெள்ளை காரர்கள் சென்றார்கள்,அதில் ஒருவனுக்கு இடது காலில் அடி பட்டு உள்ளது என்றும்,

குதிரையின் சாணத்தை வைத்து எத்தனை நேரம் ஆனது என்று கண்டுபிடிப்பதில் ஆகட்டும்,நெருப்பு மூட்ட பட்ட இடத்தில் இருக்கும் கரியின் மூலம் கண்டு பிடிப்பதில் ஆகட்டும்...செவ்விந்தியர்களுக்கு சமம் அவர்களே....

இரவு கழுகின்பாத்திரம் அருமை.....அவரின் ஒரு nice gentleman ஹீரோ தனம் சலிக்காதது...
இதன் ஆசிரியர் வெள்ளை ஏகாதிபத்தியத்தை அன்றே எதிர்த்தாரோ என்று எண்ண தோன்றும்...

கிட் வில்லர் மற்றும் கார்சன்,டைகர் ஆகியோரின் பங்கும் முக்கியமானது...


அடுத்து எனக்கு பிடித்தமானவர் ப்ளூ பெர்ரி என்றும் அழைக்கப்படும் டைகர்...இவருடன் குடி கார கிழவன் joe அடிக்கும் கூத்து அமர்க்களம் ஆனது..டைகர் ஒவ்வொரு இக்கட்டில் இருந்தும் தப்பும் வழி மிக சுவாரசியமானது...

லக்கி லுக் அவரை விட எனக்கு ஜாலி jumper உம் டால்டன் களும் தான் மிக பிடிக்கும்...

ஆவ்ரெல் இனால் ஜோ மண்டை காயும் இடங்கள் நிச்சயம் வயிற்று வலிக்கு guarantee...
ஜோ தப்பிப்பதற்காக ஜெயிலை தீயிட்டு கொளுத்தும் போது ஆவ்ரெல்
"

இப்ப ஜெயில் எரிஞ்சிடுச்சு அப்படின்னா திரும்ப நம்மள எங்கே புடிச்சு போடுவாங்க"
என்பதில் ஆகட்டும்...

"ஜெயில் கதவின் சாவி கையில் கிடைத்ததும் ஜோ,ஸ்பூன் மூலம் சுரங்கம் தோண்ட முயற்சி செய்து கொண்டிடுக்கும் ஆவ்ரெல் இடம் கொடுப்பான்...உடனே ஆவ்ரெல் ஸ்பூனை தூக்கி போட்டு விட்டு சாவி மூலம் தோண்ட ஆரம்பிப்பான்...கதவை திறக்காமல்."
really unforgettable....

இன்னும் பல....
மற்றொரு மறக்க முடியாத கேரக்டர் "இரும்பு கை மாயாவி",
மற்றும்,
டேவிட் லாரன்ஸ்,
ஸ்டீவ்,
ஆர்ச்சி
ever green சிக் பில் & co....அவர்களின் காமெடி ச்சே சான்ஸ் இல்ல...ஸெரிப்(seriff)இடம் டெபுடி கிட் வாங்கும் உதை ச்சே...
அது ஒரு கனா காலம்....
.....
இன்னும் எத்தனையோ....
காமிக்ஸ் வாங்க நான் பட்ட பாடு சொல்லி மாளாது...
புத்தக கடைகளில் நான் காமிக்ஸ் கேட்டு அவர்களிடம் இருந்து வந்த response....

"அப்படின்னா"
"யோவ் நேத்து தானே கேட்ட"
சில கடைகளில் காய் கறி உடன் புக் உம் விற்பார்கள் அங்கேயும் போய் கேட்டது உண்டு அப்பொழுது...
அவர்கள் கத்திரிக்காய் என்று நினைத்து...
"எத்தனை கிலோ?"
சில சமயம் decent ஆக "இல்லை"
சில சமயம் அவன் முறைத்த உடன் நாம் கிளம்பி இருக்க வேண்டும்(அத்தனை தடவை கேட்டு இருப்பேன்)..
"இப்ப எல்லாம் வரதே இல்லைங்க"
காமிக்ஸ் இல்லை என்றும் தெரிந்தவுடன் ஒரு வெறுமை வந்து விடும் மனதினுள்...

எப்பொழுதாவது இருக்கு என்று சொல்லும் பொது வரும் ஒரு சிலிர்ப்பு,உன்னதமான தருணம் ச்சே அது காமிக்ஸ் படிப்பவர்களுக்கே.,அதுவும் தேடி பிடித்து பல மாதங்கள் கழித்து படிப்பவர்களுக்கே புரியும்..
இவ்வளவு வயசு ஆய்டுச்சு இன்னும் காமிக்ஸ் படிக்கறான் பார் என்று கேட்பவரிடம், நான் சொல்வதெல்லாம்


"ஒரு முறை நீங்களும் படித்து பாருங்கள் என்பது தான்"

சிரிப்போ சிரிப்பு...

இந்த முறை கொஞ்சம் "A".....

இரண்டு ஆவிகள் சந்தித்து கொள்கின்றன.....

முதல் ஆவி...:"நீ எப்படி செத்த?"
இரண்டாம் ஆவி:"அத ஏன் யா கேட்கற,என்னோட பத்தினி மனைவி மேல நான் சந்தேக பட்டுட்டேன்...ஆனா அது உண்மை இல்லன்னு தெரிஞ்சதால
என் மனசாட்சி உறுத்தியதால தற்கொலை பண்ணிக்கிட்டேன்...."
முதல் ஆவி:"கொஞ்சம் புரியும் படியா சொல்லேன்..."
இரண்டாம் ஆவி:நான் வீட்டுக்கு வரும்போது யாரோ ஒருத்தன் உள்ள இருந்து பேசுற மாதிரி குரல் கேட்டுச்சு...என் மனைவி மேல சந்தேக பட்டு நான் போய் எல்லா எடத்துலயும் தேடி பார்த்தேன் ஆனா எந்த ஆம்பளையும் உள்ள இல்ல...அதனால என் மேல எனக்கே கோபம் வந்து தற்கொலை பண்ணிகிட்டேன்....

முதல் ஆவி:அட பாவி அந்த பிரிட்ஜ் (fridge)ஐ திறந்து பார்க்காம போய்ட்டியேடா .....

---------------------------------------------------------------------------------
ஒரு சர்தாரிடம் ஒருவன் வந்து,டேய் உன்னோட வீட்ல உன் மனைவியோட உன்னோட friend இருக்கான்டா...

உடனே சர்தார் வீட்டுக்கு போய் விட்டு வேக வேக வேகமாக சொன்னவிடம் வந்து...
"போடா மடையாஅவன் என் friend இல்ல,எவனோ ஒருத்தன்.."
--------------------------------------------------------------------------------------
ஒருவன் தன்னுடைய மனைவியிடம்...
"நைட் எனக்கு ஏதோ ஒரு சக்தி வந்துருச்சு,நான் பாத்ரூம் கதவ தொறந்தா லைட் தானா எரியுது...கதவ மூடுனா லைட் தானா ஆப் (off)ஆகுது..."
மனைவி:அட பாவி நீ தான் நம்ம fridge உள்ளார urine போனதா.....
--------------------------------------------------------------------------------------
சாதா ஜோக்ஸ்....
ஹெலிகாப்டர் இல் சர்தார் பைலட் இடம்...
"யோவ் அந்த பெரிய fan ஐ ஆப் பண்ணுயா ரொம்ப குளிருது..."
--------------------------------------------------------------------------------------

Tuesday, October 14, 2008

இன்னும் கொஞ்சம் சோக்கு...

இவை என் சித்தப்பா வின் நண்பர் பண்ணிய சில காமெடிகள்...

ஏற்கனவே சிலவற்றை எழுதி இருந்தாலும் இவை தனி ரகம்....


அவர் ஒரு சீனியர் lecturer அவருக்கு இங்கிலீஷ் சற்றே தகராறு,அதை வைத்து அவர் பண்ணிய காமெடிகள் தான் இவை.....ஒரு நாள் முக்கியமான files உடனே கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டி இருந்துள்ளது..ஆனால் ஐயகோ அன்று தான் அவர்களின் HOD விடுப்பு எடுத்து உள்ளார்...

வேறு வழி இல்லாத மற்றவர்களும் நேரே நம் சீனியர் இடம் சென்று கையெழுத்து கேட்டு உள்ளனர் ஆனால் இவர் மறுத்து விட்டார்,கடைசியாக எப்படியோ தாஜா பண்ணி,convince பண்ணி அவரை கையெழுத்து போட வைத்து விட்டனர் மற்றவர்கள்...சிறிது நேரத்தில் தன் விடுப்பை cancel செய்து விட்டு HOD வந்தே விட்டார்...

வந்தவர் அந்த files அனைத்தும் கையெழுத்து இட்டாகி விட்டதை அறிந்து கோபம் கொண்டு...யார் அது என்று விசாரித்தார்...

உடனே அடித்து பிடித்து கொண்டு அங்கு வந்த நம் சீனியர்...

"சார் நான் எவ்வளவோ சொன்னேன் இவனுங்க தான் கேட்காம என்னை conceive பண்ணி போட வைத்து விட்டனர் என்றார்"

HOD தலையில் அடித்து கொண்டு சிரித்தார்...

---------------------------------------------------------------------

ஒரு நாள் அவரிடம்(hostel மாணவன் ) ஒரு மாணவன் வந்து சார் எனக்கு lighta நெஞ்சு வலிப்பது போல இருக்கு சார் என்றான்...
உடனே அவர் ஆரம்பித்தார்...தம்பி இந்த வயசிலேயே நெஞ்சு வலியெல்லாம் வர கூடாது,உடம்பை பாத்துக்கோ என்று அரை மணி நேரம் lecture கொடுத்தவர் கடைசியாக சொன்னதுதான் highlight ...
அவர் சொன்னார்....
நீ எதுக்கும் ஒரு முறை டாக்டர் கிட்டபோய் xerox எடுத்து பார்த்துக்கோ என்றாரே பார்க்கலாம் அந்த பையன் அங்கேயே மயங்கி விழுந்தான்...(x-ray வை தான் அப்படி சொல்கிறார்)


-------------------------------------------------------------------------

ஒரு நாள் அவர் ஒரு ஸ்கூலில் நடந்த scientific exhibition செல்ல வேண்டி இருந்தது..
அங்கே ஒரு மாணவன் அவரை அழைத்து தன் experiment ஐ காட்டி கொண்டு இருந்தான்,அவரிடம் ஒரு conical flask ஐ காட்டி "சார் ப்ளீஸ் blow சார் என்றான்" சற்றும் யோசிக்காத நம் lecturer உடனே கையை உள்ளே விட்டார்...
அந்த பையன் ஒன்றும் புரியாமல் மீண்டும் "சார் blow" சார் என்றான் ..உடனே அவர் ஒரு குச்சியை எடுத்து உள்ளே விட்டார்...தலையில் அடித்து கொண்ட அந்த மாணவன்,"சார் ஊதுங்க சார்"....
--------------------------------------------------------------------------

இவை வேறொருவர் பற்றி என் மெயிலில் வந்த சில காமெடிகள்...

இவருக்கும் ஆங்கிலம் தகராறு...

மாணவர்களை மரத்துக்கு அடியில் நிற்க சொல்ல அவர் சொன்னது...

"Go and understand the tree"
----------

கண்ணாடி(specs) போட்ட ஒரு மாணவனை அவர் கூப்பிட பயன்படுத்திய இங்கிலீஷ்...

"Boy with the mirror come here"
-----------------------
மற்றும் அவர் சொன்ன பல காமெடி இங்கிலீஷ்....

"Take a 5 c.m wire of any length"

"you both three come here"

"all of you stand in a straight circle"

"me and he are talking why you middle middle talk"

"ok today's lessons are over i'm passing away"

------------------------------------
இது தான் மிக highlight ஆன காமெடி....

ஒரு நாள் அவர் தன் மனைவியுடன் cinema பார்க்க சென்று உள்ளார்,அங்கே அவரின் மாணவன் ஒருவன் கிளாஸ் கட் பண்ணி cinema தியேட்டர் வந்ததை பார்த்துவிட்டார்,

மறுநாள் வகுப்பில் கேட்டார்....
"I saw you in cinema theater with my wife".....

----------------------

Monday, October 13, 2008

குறும்புக்கார பசங்க...


இது என் மெயிலில் வந்த ஒரு சின்ன கதை...



அந்த கிராமத்தில் எந்த பொருள் காணாமல் போனாலும் அல்லது ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே அந்த இரண்டு சகோதர சிறுவர்களை தான் விசாரிக்கும் ,அந்த அளவுக்கு அவர்கள் famous ..அவர்களின் குறும்பை பொறுக்க முடியாத அவர்களின் தாய் நேரே அவர்கள் இருவரையும் கிராமத்திற்கு புதுசாக வந்திருந்த பாதிரியாரிடம் கொண்டு போய் விட்டாள்...அவர் முதலில் பெரியவனை மட்டும் அழைத்து இருக்க சொல்லி விட்டு சிறியவனை வீட்டுக்கு போக சொன்னார்,

பாதிரியார் பெரியவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்...

பாதிரியார்:my son,Where is God?

அதற்கு அந்த சிறுவன் ஏதும் சொல்லாமல் நிற்க,சற்றே கோப பட்ட பாதிரியார் மீண்டும், உரத்த குரலில்...
"Where is God"என்றார்..

இந்த முறை சிறுவனின் முகத்தில் லேசான கலவரம் எட்டி பார்த்தது...ஆனாலும் அமைதியாகவே இருக்க, இன்னும் கோப பட்ட பாதிரியார்,
"Where is God "என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்த,

சடாரென வேகம் எடுத்த சிறுவன் நேரே ஓடினான் ஓடினான்,அவனின் தம்பியிடம் ஓடினான்,சென்று சொன்னான் ,

"டேய் இந்த தடவை நாம் உண்மையிலேயே பெரிய பிரச்சினையில் மாட்டி கொண்டோம் என்றான்"

என்ன என்று மற்றொருவன் அமைதியாக கேற்க,அவன் சொன்னான்....

"இந்த தடவை கடவுள் காணோமாம் எல்லோரும் நாம் தான் எடுத்து இருப்போம் என்று சந்தேக படுகிறார்கள்"

மீண்டும் மீண்டும் சர்தார்..

இதோ உங்கள் சர்தார் மறுபடியும்....

ஒரு முறை சர்தார் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜ்ஐ(fridge)எவ்வளவு என்று கேட்டார்...

அமைதியாக அந்த கடைக்காரர் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

இதனால் உசுப்ப பட்ட சர்தார் ,ஒரு சர்தாருக்கு அதை நீ விற்கத்தான் போகிறாய் என்று மனதுக்குள் சொல்லிய வாறு...

தன் தலை பாகையை எடுத்துவிட்டு போய் அந்த fridge என்ன விலை என்று கேட்டார்...அந்த கடைக்காரன் "சாரி நாங்க சர்தாருக்கு இதை விற்பதில்லை "என்றார்...

அதிர்ச்சி அடைந்தாலும் காட்டி கொள்ளாத சர்தார்...

அடுத்த முறை தாடி எல்லாம் எடுத்து விட்டு,வந்து கேட்டார் அப்பொழுதும் அதே பதிலையே கடைக்காரன் சொல்ல...
சற்றும் மனம் தளராத சர்தார் மொட்டை போட்டு விட்டு இரண்டு foreigners உடன் ஒரு வில்லனை போல் வந்து கேட்க மீண்டும் அந்த கடைக்காரன் அதே பதிலையே தந்தான்...

மனம் நொந்த சர்தார் அவனிடமே நேராக சென்று...தன் தோல்வியை ஒப்பு கொண்டு,எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார்...

அதற்க்கு அந்த கடைக்காரன் ,"ஏன்னா சர்தார் மட்டும் தான் 'வாஷிங் மெஷின்'ஐ பார்த்து fridge அப்படின்னு சொல்வார்"என்றான் கூலாக..

excuse me....

சென்னை போர் கால அடிப்படையில் தீபாவளிக்கு தயாராகி கொண்டு வருகிறது என்று தான் தோன்றுகிறது..
தி.நகர் எங்கும் வரலாறு காணாத கூட்டமா அல்லது அந்த fly over இனால் தெரியும் மாயையா என்று தெரியவில்லை,நிச்சயம் தி.நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து போத்திஸ் அல்லது சரவணா பிரம்மாண்டமாய் போவதற்குள்,கசக்கி பிழிந்து அல்லோல கல்லோல பட்டு செல்ல வேண்டி உள்ளது..அதில் நாம் அடிக்கடி நம் purse மற்றும் செல் போன் ஆகியவை பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கொரு முறை பார்க்க வேண்டி உள்ளது...நம் பாக்கெட்டில் நாம் கை விட்டாலே பக்கத்தில் உள்ளவன்(ர்) சந்தேகமாக பார்க்கிறார்,ஏன் இவ்வளவு அவசரம்,ஏதோ போர் அல்லது பங்கு சந்தை வீழ்ச்சியால் நமக்கு உடுத்த உடை கூட கிடைக்காதோ என்பது போல் வருடம் முழுவதற்கும் தேவையானதை வாங்க வருபவர்கள் போல் தான் அனைவரும் வருகிறார்கள்...ஒவ்வொரு தீபாவளி அன்றும் வானில் சில கோடியும் தெருவில் பல கோடியும் வெடித்து காற்றில் கரையும் மாயம் தொடரும் என்றே தோன்றுகிறது,

இதில் கடைக்கு வரும் போது பல பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது,excuse me என்றே மிரட்டும் பெண்களை ரசிக்க தோன்றுவதில்லை,பல வார்த்தைகள் ஏதற்காக தோற்றுவிக்கபட்டதோ அதன் அடிப்படையில் இருந்து மாறி அதன் நேர் மாறானவற்றுக்கே பயன்படுகிறது அப்படி மாறி போனது தான் இந்த excuse me..excuse me என்று மிரட்டுவதற்கு பதில்" யோவ் நகருய்யா" என்றே decent ஆக சொல்லி விட்டு போகலாம்....

இன்மேலும் மிரட்டுவதற்கு பதில் கொஞ்சம் நகருங்க என்று கொஞ்சு தமிழில் காதோரம் கொஞ்சி பேசிவிட்டு போகலாமே...

Friday, October 10, 2008

அப்படியா?

இங்குள்ள வார்த்தைகளுக்கு ஒரு சிறப்பு உள்ளது...அது கடைசியில்..
banana
dresser
grammar
potato
revive
uneven
assess

அது ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை எடுத்து கடைசியில் வைத்து படித்தாலும் அதன் பெயர் மாறாது...

uncopyrightable என்பதே எழுத்துக்கள் மீண்டும் வராமல் எழுத படும் மிக பெரிய வோர்ட்...

இன்னும் கொஞ்சம் சோக்கு....

இது நல்ல காமெடி,சற்றே பழசு என்றாலும் நிச்சயம் சிரிக்க வைக்கும்....

Bond Meets an andhra guy,

BOND:hai I'm bond, James Bond....

Andhra Guy:Hey I'm Naidu, venkata naidu,siva venkata naidu,lakshmi narayana sivavenkata naidu,srinivasalu lakshmi narayana siva venkata naidu,rajasekara srinivasulu lakshmi narayana siva venkata naidu,


Bond Committed suicide.....

மீண்டும் சர்தார்,ஆனால் இந்த முறை சற்றே அறிவாளியாக...

பாகிஸ்தான் border இல் ஒரு சர்தார்ஜி தினமும் ஒரு பைக் இல் கொஞ்சம் மணலை வைத்து கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது,தினமும் அவனை சோதனை செய்யும் அதிகாரி நொந்து விடுவார்,அவருக்குள் உள்ளே ஒரு சிறு உறுத்தல் மட்டும் இருந்து வந்தது...

ஒரு நாள் அவர் சர்தாரை தனியே ஒரு பாரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் அவனை அணுகி,நீ ஏதோ ஒன்றை திருடி செல்கிறாய் என்று மட்டும் எனக்கு தெரிகிறது ஆனால் அது என்ன என்று என் மன திருப்த்க்காக மட்டும் சொல் என்றார்,அதற்க்கு சர்தார்....உண்மைதான் நான் திருடுவது...அது,

பைக் என்றார் அமைதியாக...


அடுத்தது...

ஒரு சர்தாரும் ஒரு அமெரிக்கரும் அருகருகே இருக்கையில் அமர்ந்தவாறு விமான பயணம் செல்ல நேர்ந்தது,உள்ளே சென்றதும் சர்தார் தொங்க சென்று விட்டார்...
அவரை எழுப்பிய அமெரிக்கர்,"நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உனக்கு நான் 5 $ தருகிறேன்,அதே போல் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொன்னால் நீ எனக்கு 5 $ தர வேண்டும்",
என்றார்...
ஆனால் சர்தார் ஏதும் சொல்லாமல் மீண்டும் தூங்க சென்று விட்டார்,
அமெரிக்கர் விடாப்பிடியாக,சரி நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் 500$ தருகிறேன் ,நான் கேட்கும் கேள்விக்கு உனக்கு பதில் தெரியவில்லை என்றால் எனக்கு நீ 5$ மட்டும் தந்தால் போதும் என்றார், இது சர்தாரை உசுப்பி விட்டது,அவரும் ஒத்துக்கொண்டார்,

முதில் அமெரிக்கர்:உலகின் மிக வேகமான பறவை?
ஏதும் பேசாத சர்தார் தன் பையில் இருந்து ஒரு 5$ எடுத்து கொடுத்தார்,
அடுத்து சர்தார்:து போகும் போது இரண்டு கால்களுடனும்,வரும் போது நான்கு கால்களுடனும் வரும் என்று கேட்டார்,விடை தெரியாத அமெரிக்கர்,ஸ்பெஷல் உதவியுடன் தன் நண்பர்களுக்கு போன் பண்ணியும்,discussion போர்டு எல்லாம் கேட்டார் ,யாருக்கும் விடை தெரியாததால்,அவர் 500$ எடுத்து சர்தாரிடம் நீட்டி விடை கேட்டார்,சர்தார் அமைதியாக அதை வாங்கி வைத்துக்கொண்டு அவரிடம் 5$ கொடுத்து விட்டு மீண்டும் தூங்க சென்றார்....

மறுபடியும் முட்டாள் சர்தார்....

சர்தார் இருவர் பாம் வைக்க சென்றனர்,முதலாமவர் நாம் வைக்கும் போது பாம் வெடித்து விட்டால்?
இரண்டாமவர் என்கிட்டதான் இன்னொன்னு இருக்கே....

ஒரு சர்தார் தன் மனைவியுடன் ஒரு ஆட்டோவில் செல்லும் போது ஆட்டோ காரன் கண்ணாடியில் தன் மனைவியை பார்ப்பதை கண்ட சர்தார் கோவமாக,

"டேய் கண்ணாடிலையா பாக்கற பின்னாடி வாடா நான் ஓட்டுறேன்"...

ஒருவனிடம் மற்றொருவன்....ஒரு நீர் மூழ்கி கப்பல் நிறைய இருக்கும் சர்தார்களை நீ எப்படி கொள்வாய்?
மற்றொருவன்,சிம்பிள் கதவை தட்டி விட்டு வந்து விடுவேன்....


detective போஸ்ட்டிற்கான நேர்முக தேர்வில்,
interviewer...:who killed gandhiji?
sardhar:thank you for the job sir,i will soon find the murderer sir....

மீண்டும் சந்திப்போம்.....

Thursday, October 9, 2008

நான் ரசித்த இந்த வார மெயில்....

எனக்கு பிடித்த mailil வந்த சில படங்கள் இவை...
don't miss the last one......


பாவம் எலி...
என்ன சுகம்....
நான் எங்கே இருக்கேன் கண்டுபுடி?
உவ்வ்வே......
நல்லா கிளப்புரங்கப்பா பீதி...



இந்த படத்தில் உள்ள விசேசம் என்னவென்றால் அருகே ஐன்ஸ்டீன்....

சற்றே தள்ளி தூரத்தில் இருந்து பார்த்தால் Marilyn manroe ...How is it?



சர்தார்ஜி சோக்கு

எனக்கு பிடித்த சில சர்தார்ஜி ஜோக்ஸ் இங்கே,

சர்தார் ஒரு முறை நடந்து போகும் போது கீழே கருப்பாக ஏதோ இருக்க,அதை தொட்டு நக்கி பார்த்து விட்டு சொன்னார்,

"சை சாணி நல்ல வேல மிதிக்கல"


இது எனக்கு மிகவும் பிடித்த ஜோக்,உங்களுக்கு?

சர்தார் interview வில்,
interviewer:மிஸ்டர் சர்தார் எலெக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு இயங்கும்?
சர்தார்: டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
interviewer:நிறுத்து ........................................
சர்தார்:டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப் தப் தப்.(நிறுத்திட்டார்)

இது எனக்கு பிடித்த மற்றொரு ஜோக்...

ஒரு சர்தார்,ஒரு அமெரிக்கர் மற்றும் ஒரு இங்கிலீஷ்காரன் ஆகியோர் ஒரு கருவியின் முன் நிறுத்த படுகிறார்கள்,அது பொய் சொல்பவர்களை சுட்டுவிடும்,

முதலில்,
அமெரிக்கர்:I think,I can smoke 100 cigarettes a day....

டுமில்.......

அடுத்து
இங்கிலிஷ்காரன்,:I think,I can eat 20 chickens a day...

டுமில்......

அடுத்து நமது
சர்தார்:I think,

டுமில்.....

இது சரியான கேலி கூத்து...

ஒரு முறை சர்தாரின் ரேடியோ சரியாக பாடாததினால் அதை திறந்து பார்க்கிறார்,உள்ளே ஒரு எலி செத்து இருக்கிறது,உடனே சர்தார்,

"அடக் கடவுளே இத்தன்னை நாளா பாடிட்டு இருந்தவன்
பூட்டானே ...."

இது மற்றொரு classical ஜோக்...

ஒரு சர்தார் இடம் போலீஸ் விசாரணை,
"எப்படி இத்தனை சர்தார்கள் ரயிலில் அடிபட்டு இறந்தார்கள்?"
சர்தார்:அவங்கதான் ரயில் முதலாம் platform இல் வருகிறது என்றார்கள் அனைவரும் ரயில் வந்துவிடும் என்று தண்டவாளத்தில் இறங்கி விட்டார்கள்...

போலீஸ்:
"நீ மட்டும் எப்படி தப்பிச்ச?"

சர்தார்:"நான் தற்கொலை பண்ணிக்க வந்தேனுங்க..."


இது சரியான A ரகம்,
(பிகு:statuory warning:consumption of alcohol is injurious to health)
ஒரு அரசன் தன் மகளுக்கு சுயம்வரம் வைக்க விரும்பி ஒரு போட்டி
வைத்தான்,விதிமுறை இதுதான்,
போட்டியாளர் மூன்று அறைகளுக்கு செல்ல வேண்டும்,முதல் அறையில் இருக்கும் விஸ்கி,பிராண்டி போன்றவற்றை ராவாக அடிக்க வேண்டும்,இரண்டாம் அறையில் இருக்கும் புலியுடன்(சாதா புலி அல்ல அது சைபேரிய புலி)மோதி அதன் பல்லை பிடுங்க வேண்டும்,மூன்றாம் அறையில் இருக்கும் ஒரு மங்கோலியா பெண்ணை
அந்த மாதிரி விசையத்தில் திருப்தி படுத்த வேண்டும்(மங்கோலியா பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா என்று கேள்வி, அவ்வளவு அழகானவர்கள்).

முதலில் சென்றவர் ரம் விஸ்கி அடிப்பதற்குள் சுருண்டு விழுந்து விடுகிறார்,இரண்டாமவர் புலியுடன் வீரமாக போராடி சாவை அணைத்து விடுகிறார்,
அடுத்து நம் சர்தார்,விஸ்கி,ரம்,பிராண்டி என்று சகலத்தையும் அடித்து விட்டு புலி இருக்கும் அறைக்குள் நுழைகிறார் கதவு சாத்தபடுகிறது,ஒரு மணி நேரம் ஆகியும் வெளியே வர வில்லை,அவ்வ போது புலியின் உறுமல் மட்டுமே கேட்கிறது,அடுத்த கால் மணி நேரத்தில் வெளியே வந்த சர்தார் கேட்டார்....

"எங்கே அந்த மங்கோலியா பெண் அவள் பல்லை பிடுங்க வேண்டும்......."

அடுத்து ஒரு ஜோக்...

இரவெல்லாம் ஒரே கொசு கடியில் அவதியுற்ற சர்தார் விஷத்தை மடக் மடக் என்று குடித்து விட்டு கொசுக்களை பார்த்து,இப்ப கடிங்க பார்க்கலாம்,கடிச்சா செத்துடுவிங்க ....

அடுத்து,

சர்தார் ஒரு ப்ரொவ்சிங் சென்டெரில் மற்றொருவரிடம்...
உங்கள் password என்னவென்று எனக்கு தெரியுமே...
மற்றொருவர் சந்தேகத்துடன் என்ன?
சர்தார்:"அஞ்சு ஸ்டார்(*)...."
மற்றொருவர்,போடா கிறுக்கா அது raman...

ஒரு சர்தார் accident ஆன இடத்தை தாண்டி செல்லும் போது ஒருவர்,ஐயோ என் கை போச்சே என் கை போச்சே...

சர்தார்:அங்கே ஒருத்தன் தலை போனதற்கே அழலையாம் நீ என்னடான்ன கை போனதற்கு போய்.....

சர்தார் ஒருவர் tourist guide ஆக ,அனைவருக்கும் ஒவ்வொரு இடமாக காட்டி வர,ஒருவர் ஒரு எலும்பு கூட்டை காட்டி யார் அது என்று கேட்க,சர்தார் பாபர் என்று சமாளித்தார்,மற்றொருவர்,அப்போ அந்த சின்ன எலும்பு கூடு?
சர்தார்:"அது பாபர் சின்ன வயசில்...."

Monday, October 6, 2008

படித்ததில் பிடித்தது

இவை நான் ரசித்த ஹைக்கூ மற்றும் சில கவிதைகள்...

ஆசையால் வாங்கினேன்…
புத்தர் சிலை.

சோம்பேறியின் வீட்டில் சுறுசுறுப்பாய்….
சிலந்தி.

குழாயடியில் அமைதி ( ?! )
குடங்களுடன் ஆண்கள்.

சுடும் வெயில் கடும் மழை
பாவம் அவள் பாதச்சுவடுகள்

சேமிப்பது சுலபம் செலவழிப்பது கடினம்
உடலில் கொழுப்பு.

வீட்டில் ஒரு செடியில்லை
முதலீடோ தேக்குமரத்திட்டத்தில்.

எழுநூறு அடியில் ஆழ்குழாய் தண்ணீர்
செம்மண் நிறத்தில்
பூமித்தாயின் குருதி.

சுதந்திர தினத்தன்று உரையாற்றினார் பிரதமர்
கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடியே.

ஏழையின் கவலை - பணத்திற்கு என்ன செய்வது என்று?
பணக்காரனின் கவலை - பணத்தை என்ன செய்வது என்று?

வீடெங்கும் சன்னல்கள்
மூடியபடியே…
நகரத்து வீடு.

எனக்கு ஒரு சந்தேகம்…
இறந்தவரைப் பார்த்து மனிதர்கள் அழுவது போல்
பிறந்த குழந்தையைப் பார்த்து ஆவிகள் அழுமோ?

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு…

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு…

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை…

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்…

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்…

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்…

நானாக நானிருக்க
நட்பே…
நீ எனக்கு
நட்பாக வேண்டும்…

நன்றி
மணிகண்டன்

—–

மர்மக் கடிதத்தில்,

“கடற்கரைக்கு வாருங்கள்”

–உன் அன்புக்காதலி என்று…

ஆனந்தத்தில் நான்….

நால்வரில் எவளோ என்று…..

சில வித்தியாச கேள்விகள்.....

1.நீங்கள்,ஆழ் கடலில்,வெறும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்த படி,சாதா உடையில் நீந்தினால் என்னாகும்?
2.நீங்கள்,வான் வெளியில்(outer space)வெறும் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசித்த
படி உலாவினால்(சாதா உடையில்),என்ன ஆகும்?
3.நம் சூரிய குடும்பம் அருகே ஒரு black hole உருவாகினால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
4.உங்கள் வயது 40
உங்கள் மகனின் வயது 20 ,
உங்களுடைய மகனை நீங்கள் பூமியில் விட்டு விட்டு வான் வெளியில் light இன் வேகத்தில் (3*10^8 m/s)சுமார் ஐம்பது வருடம் சுத்திவிட்டு,பின்பு பூமிக்கு திரும்பும் போது உங்கள் வயது என்னவாக இருக்கும்?
5.ஒளியின்(light) வேகத்தில் ஒரு பொருள் பயணம் செய்யும் போது அதன் நிறை(mass) என்னவாக இருக்கும்?



விடைகளை comment இல் தெரிவிக்கவும்...
விடைகள் சிறிது நாட்களில்...

Friday, October 3, 2008

முடியுமா உங்களால்.(விடை அளியுங்கள்)

சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?



பதில்களை comment மூலம் சொல்லலாம்.

விடை காண முடியாத கேள்விகளுக்கு பின்னால் விடை தரப்படும்.
Blog Widget by LinkWithin