Sunday, January 4, 2009

ஒரு சோக்கு கதை......+கொஞ்சம் சோக்கு

இதுவும் சுட்டது.....என் மாமாவின் blog இல் இருந்து ,

கதை எப்படி?

இது ஒரு சோக்கு.அதாவது நகைச்சுவை. மூன்று நண்பர்கள் ஒரு ஆயிரம் மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்கள்.அவர்களது வீடு 910வது தளத்தில் இருந்தது.லிப்ட் வசதி இருப்பதால் அவர்களுக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. ஒரு நாள் மூவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர்.லிப்ட் பொத்தானை அழுத்திப் பார்த்தால் அது இயங்கவில்லை.அவர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.வேறு வழியேயில்லை, நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்.அது என்னவென்றால் இத்தனை மாடிகளையும் கடந்து செல்லும் களைப்பு தெரியாமல் இருக்க ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் என்பதாகும்.முதலில் ஒருவன் ஆரம்பித்தான்.அது மிகவும் சுவாரசியமான கதையாய் இருந்தது.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அது முதலாமவன் சொன்னதைவிட சுவாரசியமாக இருந்தது.கதையை முடிக்கும் போது 850 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை.இருவரும் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான்." நீங்கள் இருவரும் நல்ல கதை சொன்னீர்கள்.முதலாமவன் திகில் கதையும்,இரண்டாமவன் சிரிப்பு கதையும் சொன்னீர்கள். நான் இப்பொழுது சோகக் கதை சொல்ல போகிறேன்" என்றான்.சரி சொல் என்றதும் அவன் சொன்னான்,"வீட்டு சாவி கீழே காரிலேயே இருக்கிறது.அதை எடுக்க மறந்துவிட்டோம்".
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
மீண்டும் 850 மாடிகளை கடக்க வேண்டுமே? அதனால் திரும்பவும் அதே யோசனையை கடைபிடித்தார்கள்.முதலாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 400 மாடிகளை அவர்கள் கடந்திருந்தார்கள்.வழக்கம்போல் நல்ல கதை சொன்னான்.அடுத்து இரண்டாமவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதையை முடிக்கும் போது 10வது மாடியில் அவர்கள் நின்றிருந்தார்கள்.இப்பொழுது மூன்றாமவன் முறை. அவன் சொனனான், "ஆகா! இருவரும் என்ன அழகான கதை சொன்னீர்கள்.வழக்கம்போல் இந்தமுறையும் நான் ஒரு சோகக்கதை சொல்ல போகிறேன்" என்றான். மற்ற இருவரும் பயந்துபோய் அவன் முகத்தை பார்த்தார்கள்.அவன் சொன்னான், " நாம்தான் ஒரு மாற்று சாவியை எதிர்வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறோமே.இந்த சாவிக்காக இவ்வளவு தூரம் வரத் தேவையே இல்லையே ".இதைக் கேட்ட மற்ற இருவரும் நொந்து நூலானார்கள்.
கதை இத்துடன் முடிந்ததா?

இல்லை. தொடர்ந்து படியுங்கள்.
பிறகென்ன வழக்கம்போல் அதே ஒப்பந்தம்.முதலாமவன் இந்தமுறை மிகப் பிரமாதமான கதையை சொன்னான்.அவன் முடிக்கையில் 400 மாடி முடிந்திருந்தது. அடுத்து இரண்டாமவன் ஆரம்பித்தான். அவனும் நல்ல ஒரு கதையை சொல்லி முடித்தான்.800 மாடி முடிந்திருந்தது.மூன்றாமவன் இந்தமுறை ஓவென்று அழத் தொடங்கினான். மற்ற இருவரும் பதறி "ஏனடா அழுகிறாய்? சொல்லிவிட்டு அழுதுதொலை" என்றார்கள். அவன் சொன்னான்" கடவுள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை " என்றான். அவர்கள், "ஏன், என்ன ஆயிற்று " என்று கேட்டார்கள். அதற்கு அவன்," தொடர்ந்து என்னைமட்டும் சோகக்கதையாக சொல்லவைக்கிறாரே" என்றான்.இதைக்கேட்ட மற்ற இருவரும் பயந்து போனார்கள்."மீண்டும் சோகக்கதையா?சீக்கிரம் சொல்" என்றார்கள். அவன் சொன்னான்," நண்பர்களே, நாம் இவ்வளவு நேரமும் ஏறி,இறங்கிக் கொண்டு இருப்பது நமது குடியிருப்பில் அல்ல, பக்கத்து குடியிருப்பில்"
--------
பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.
அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.
பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.
ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.
-----------------------------------------------------------------------------
ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?
மாணவன்: சார்! 54 சார்.
ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?
மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.
---------
நன்றி......

7 comments:

கூட்ஸ் வண்டி said...

சோக்கெல்லாம் மிக அருமை

coolzkarthi said...

நன்றி கூட்ஸ் வண்டி

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் ஜோக். மாடிப்படி ஜோக் சூப்பர். நல்ல கற்பனை வளம். கீப் இட் அப்.

மாடிப்படி ஜோக் முதல் பாதி மட்டும் முன்பே படித்திருக்கின்றென். அதை மிக அழகாக டெவலப் செய்துள்ளீர்கள்.

I am sure you are having a very good future.

இராகவன் நைஜிரியா said...

உங்களது பதிவுகளை தமிழிஷில் இணக்கவும்.

Anonymous said...

i think u get the first joke in sujathas some article. i already came acros this joke. but great. when i typing also, i am laughing..

coolzkarthi said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராகவன் சார்....

coolzkarthi said...

thank you parthiban.....

Blog Widget by LinkWithin