Monday, November 3, 2008

படா சோக்கா கீதுப்பா...(ஜோக்ஸ்)



சில நாட்க்களுக்கு முன் நான் படித்த ஜோக்ஸ் இவை,

சிறந்த போலீஸ் force யார் என்று கண்டறிய நடந்த போட்டியில்,இங்கிலாந்து போலீஸ்,ஸ்காட்லாந்து போலீஸ் மற்றும் நம் தமிழ்நாடு போலீஸ் கலந்து கொள்கிறார்கள்...
விதிமுறை இதுதான்,அனைவரையும் கிர் காட்டில்(சிங்கங்கள் நிறைந்த காடு)கொண்டு போய் விட்டு விடுவார்கள்...யார் யார் எவ்வளவு நேரத்தில் சிங்கத்தை கொண்டு வருகிறார்களோ அதை பொருத்து வெற்றி...

முதலில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் அரை மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்தனர்...அடுத்து இங்கிலாந்து போலீசார் முக்கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தை இழுத்து கொண்டு வந்தனர்...

ஒரு மணி நேரம் ஆகியும் நம்மவர்கள் வராததினால் சந்தேக பட்ட குழுவினர் காட்டுக்குள் நம் போலீசை தேடி போயினர்...அங்கே,

மரத்தில் ஒரு கரடியை கட்டி வைத்து விட்டு நம் போலீசார் அடி பின்னி சொல்லி கொண்டு இருந்தனர்,
"ஹே ஒழுங்கா ஒத்துக்கோ நீ தானே சிங்கம்"
"அடி வாங்கியே சாகாத,ஒழுங்கா நீ தான் சிங்கம்னு ஒத்துக்கோ"
-------------
காதலி:நம் விஷயம் எங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சு...
காதலன்:ஐய்யோ என்ன சொன்னாங்க?
காதலி:இவனையாவது கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னாங்க....
-------------
நம் சர்தார் இல்லாமல் ஜோக்ஸா ?

இது நான் படித்து ரொம்ப நேரம் சிரித்து மகிழ்ந்தது...
ஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு)மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,
"இங்க பாருங்க,இதில் aids கிருமி திரவம் இருக்கு,ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க "என்றான்...
முதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,
பின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்...
ஆனால் எதற்கும் கவலை படாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்....

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க,aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார்,
"எனக்கு தான் aids வரதே,ஏனா நான் தான் காண்டம்(condom)போட்டு இருக்கேனே.."

என்று சொன்னார்...
-------------------------
சர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் கிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்...
கொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,
"யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது"என்ற படி சென்றுவிட்டார்...
------------------------
நன்றி கூல்....
உங்களுக்கு மிகவும் பிடித்தது?

4 comments:

balava said...

nejamalum super mokkaiya irrukuthu

கார்க்கிபவா said...

நல்ல ஜோக்ஸ்.. அப்படியே உங்க கைவண்ண‌த்தையும் காட்டுங்க..அப்பதான் மக்கள் விரும்பி வருவாங்க..(அய்யய்யோ அட்வைஸ் பண்ண் ஆரம்பிச்சிட்டேனா.தப்ப நினைக்காதீங்க பாஸ்)

coolzkarthi said...

நன்றி balava....

coolzkarthi said...

நன்றி கார்க்கி அவர்களே,கண்டிப்பாக நான் எழுதுவேன்....ஏற்கனவே சிறிது எழுதியும் உள்ளேன்....

Blog Widget by LinkWithin